முலாயம்சிங் யாதவ் முசோலினி: பெனிபிரசாத் வர்மா!
லக்னௌ: உத்தரபிரதேச முகாம்களில் சதிகாரர்கள் தங்கியிருப்பதாக கூறிய முலாயம்சிங் யாதவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெனிபிரசாத் வர்மா கூறியுள்ளார். அதோடு மட்டுமல்லாது முலாயம் சிங் யாதவை முசோலினி என்றும் அவர் வர்ணித்துள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ், உத்தரபிரதேச மாநில நிவாரண முகாம்களில் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை, காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சதிகாரர்கள் தான் தங்கியிருக்கிறார்கள் என்று கூறினார். ஆனால், முகாமில் சதிகாரர்கள் யாரும் இல்லை என்றும் உயர்மட்டக்குழு அறிக்கை கொடுத்துள்ளது.

இந்நிலையில் மத்திய மந்திரி பெனிபிரசாத் வர்மா, ''முகாம்களில் சதிகாரர்கள் தங்கியிருப்பதாக கூறிய முலாயம்சிங் யாதவ் மன்னிப்பு கேட்க வேண்டும். முகாமில் வாழும் இஸ்லாமியர்களிடம் இருந்து முலாயம் சிங் யாதவ் மன்னிப்பு பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கும், முலாயம் சிங் யாதவுக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை. ஒருவர் ஹிட்லர் மற்றொருவர் முசோலினி" என்றும் பேனிபிரசாத் வர்மா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications