பணப்பரிவர்த்தனைக்கு அம்பேத்கர் பெயரில் ‘பீம் செயலி’… பிரதமர் மோடி அறிமுகம்
பணப் பரிவர்த்தனைக்காக அம்பேத்கர் பெயரில் ‘பீம் செயலி’யை பிரதமர் மோடி இன்று டெல்லியில் அறிமுகம் செய்தார்.
டெல்லி: பணப் பரிவர்த்தனைக்காக அம்பேத்கர் பெயரில் 'பீம் செயலி'யை பிரதமர் மோடி இன்று டெல்லியில் அறிமுகம் செய்து வைத்தார். இந்தியாவின் பொருளாதாரம் குறித்து அம்பேத்கர் தெளிவான பாதையை கொண்டிருந்ததால், அவரின் பெயரில் இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.
டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மின்னணு பணப் பரிவர்த்தனைக்கான புதிய செல்போன் செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னார், விழாவில் மோடி பேசியதாவது:
டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை அதிகரிக்க வேண்டும். மின்னணு பரிவர்த்தனைகளை நாட்டு மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. மின்னணு பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் மக்களுக்கு பரிசு கொடுத்து கவுரப்படுத்தப்படும். அதற்காக தற்போது 'பீம் செயலி' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பண பரிவர்த்தனைகளை மக்கள் மேற்கொள்ளலாம்.
இந்தச் செயலியில் வருங்காலத்தில் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்படும். இதனை பயன்படுத்த தொலைபேசி இணைப்பு தேவையில்லை. உங்கள் விரல் ரேகையே அனைத்து வங்கி பரிமாற்றத்திற்கும் போதுமானது. நாட்டில் 35 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரிடமும் கைபேசி உள்ளதால் டிஜிட்டல் புரட்சி ஏற்படும்போது நாடு வரலாறு படைக்கும். இது ஏழைகளுக்கும், சிறுவணிகர்களுக்கும் மிகவும் பயனளிக்கும்.
இந்தியாவின் பொருளாதாரம் குறித்து அம்பேத்கர் தெளிவான பாதையை கொண்டிருந்தார். இதன் காரணமாகவே தலித்துகளின் நாயகனாக உள்ள அம்பேத்கரின் பெயரை இந்தச் செயலிக்கு வைத்துள்ளோம். ஒரு காலத்தில் காகிதம் மூலம் தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்துவதில் இந்தியா புரட்சி செய்துள்ளது என்று மோடி கூறினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications