கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை
Subscribe to Oneindia Tamil
நாக்பூர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலுள்ள அவரது வீட்டில் ரூ.45000 ரொக்கம் மற்றும் செல்போன்களை திருடர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து இன்று விவரம் தெரியவந்ததையடுத்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் இருர நாட்கள் முன்பு, மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மூன்று வாலிபர்களால் தாக்கப்பட்டார். இந்த நிலையில் உமேஷ் யாதவ் வீட்டில் கொள்ளைபோயுள்ளது.
ரிசர்வ் வங்கியில் உமேஷ் யாதவுக்கு கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications