கிணற்றில் விழுந்த 8 வயது குழந்தை.. வேடிக்கை பார்க்க போன 40 பேர் தவறி விழுந்ததால் அதிர்ச்சி
போபால் : மத்திய பிரதேச மாநிலம் விடிஷாவில் கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுமி மீட்கப்படுவதை வேடிக்கை பார்த்த 40 பேர் கிணற்றின் சுவர் சரிந்து அடுத்தடுத்து தவறிவிழுந்தனர். இந்த விபத்தில் இதுவரை 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
Recommended Video
மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது விடிஷா மாவட்டம் , இங்குள்ள ஒரு கிராமத்தில் நேற்று மாலை 8வயது சிறுமி கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
திடீரென சிறுமி கிணற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து சிறுமியை மீட்க மீட்பு படை விரைந்து வந்தது. அதற்குள் கிணற்றைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் கூடியது. கிராமம் முழுக்க பரவிய தகவலால் அவர்கள் அனைவரும் கிணற்றின் சுவரை சுற்றி நின்று கொண்டு வேடிக்கை பார்த்தனர்.

உயிருக்கு போராடினர்
அப்போது கிணற்றின் ஒரே சுவரில் 40க்கும் மேற்பட்டோர் சாய்ந்து நின்று கொண்டிருந்ததால் அது திடீரென சரிந்தது. இதனால் சுமார் 40 பேர் கிணற்றுக்குள் தவறி விழுந்தனர். 40 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் ஏராளமானோர் விழுந்து உயிருக்கு போராடினர். அவர்களை மீட்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

3 பேர் உடல்கள்
தற்போது வரை 23 பேர் மீட்பு படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். இந்த 23 பேரில் 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்க மீட்பு படையினர் போராடி வருகிறார்கள். இதுவரை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

விசாரணைக்கு உத்தரவு
இந்த துயர சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு கல்வித்துறை அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங்கிற்கு அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.

10 பேர் பலியாகியிருக்கலாம்
இதனிடையே முதல் முதலில் கிணற்றில் விழுந்த சிறுமி உள்பட 17 பேரை மீட்க வேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 10 பேர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications