முலாயம் மீது புகார் கூறிய ஐபிஎஸ் அதிகாரி மீது பலாத்கார வழக்கு.. உ.பி ஆளுங்கட்சி அதிரடி
லக்னோ: உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் தன்னை மிரட்டுவதாக புகார் தெரிவித்திருந்த ஐ.பி.எஸ். அதிகாரி அமிதாப் மீது அதிரடியாக பலாத்கார வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால், இது தனது புகாருக்கு முலாயம் சிங் கொடுத்த ரிட்டர்ன் கிப்ட் என போலீஸ் அதிகாரி அமிதாப் தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தலைமையில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான ஆட்சி நடை பெற்று வருகிறது. இந்நிலையில், அமிதாப் தாக்குர் என்ற மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் தன்னை மிரட்டுவதாக புகார் தெரிவித்தார்.

அமிதாப்பிற்கு நேற்று முன் தினம் மாலையில் போன் செய்த முலாயம், ‘'ஜஸ்ரானா மற்றும் பெரோசாபாத்தில், நீ அடிபட்டது மறந்து போனதா... உன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், அதை விட மிகவும் கடினமான விளைவுகளை சந்திக்க வேண்டிஇருக்கும்' என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான ஆடியோவை செய்தியாளர்களுக்கு போட்டுக் காட்டிய அமிதாப், போலீசிலும் புகார் அளித்தார்.
ஆனால், முலாயம் மீது அமிதாப் புகார் தெரிவித்த சில நிமிடங்களிலேயே அவர் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. லக்னோவின் கோமதி நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற இளம்பெண் ஒருவர், 'போலீஸ் அதிகாரி அமிதாப் தாக்குர் என்னை பலாத்காரம் செய்து விட்டார்' எனப் புகார் அளித்தார். அந்தப் புகாரை பதிவு செய்த போலீசார், இன்று அதை வழக்காக மாற்றினர்.
இது குறித்து உத்திரப்பிரதேச எதிர்கட்சியான, முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கண்டனம் தெரிவித்துள்ளது.மேலும், ‘இந்த விவகாரங்களை, மாநில போலீசார் விசாரிக்கக் கூடாது. சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்' என தெரிவித்து உள்ளது.
இந்தப் பலாத்காரப் புகார் தொடர்பாக போலீஸ் அதிகாரி அமிதாப் கூறுகையில், ‘முலாயம் சிங் மீதான எனது புகாருக்கு, இந்தப் பலாத்காரப் புகார் ரிட்டர்ன் கிப்ட்' எனத் தெரிவித்துள்ளார்.
போலீஸ் அதிகாரி அமிதாப் தாக்குரின் மனைவியும், சமூக ஆர்வலருமான நூதன் இது தொடர்பாக கூறுகையில், "என் கணவர் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது. என் கணவரும் வழக்கு தொடர்ந்துள்ளார்; அவர் மீது பெண் ஒருவரும் வழக்கு தொடுத்துள்ளார். இரண்டையும், போலீசார் நியாயமாக விசாரிக்க வேண்டும். இதுபோன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் நாங்கள் அஞ்சுபவர்கள் இல்லை. இது மட்டுமல்ல, இன்னும் பல வழக்குகள் என் மீதும், என் கணவர் மீதும் பாயும் என நம்புகிறேன்" என்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications