”அட்டாக்” பாண்டியை மதுரை கோர்ட்டில் ஆஜர் படுத்த அவகாசம் வழங்கியது பெலாபூர் கோர்ட்!
மும்பை: மும்பையில் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டியை வரும் 26 ஆம் தேதிக்குள் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பெலாபூர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர் பொட்டு சுரேஷ் கடந்த 2013 ஆம் ஆண்டில் மதுரையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அட்டாக் பாண்டி தலைமறைவானார்.

இதனையடுத்து அட்டாக் பாண்டியை தேடப்படும் குற்றவாளியாக மதுரை நீதிமன்றம் அறிவித்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தேடப்பட்டு வந்த நிலையில், மும்பையின் புறநகர் பகுதியான வஷியில் அம்மாநில போலீசார் உதவியுடன் மதுரை சிறப்புப்பிரிவு காவல்துறையினர் அட்டாக் பாண்டியை கைது செய்தனர்.
பின்னர் அவரை பெலாபூர் பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து வரும் 26 ஆம் தேதிக்குள் மதுரை நீதிமன்றத்தில் அட்டாக் பாண்டியை ஆஜர்படுத்த பெலாபூர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது.
இந்நிலையில் தமிழக டி.ஜி.பி, மாநில தலைமைச் செயலாளர் மற்றும் தென்மண்டல ஜ.ஜி ஆகியோருக்கு அட்டாக் பாண்டியின் மனைவி தயாள், கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தமது கணவரை என்கவுன்டரில் கொல்ல போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும், அவரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications