நாகாலாந்து: ராணுவத்தால் 14 அப்பாவிகள் சுட்டுக் கொலை- பொதுமக்கள் தாக்கியதில் ஒரு ராணுவ வீரர் மரணம்!
கோஹிமா: நாகாலாந்து மாநிலத்தில் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து நாகாலாந்து சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
நாகாலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். நாகா தீவிரவாதிகள் அல்லது உல்பா தீவிரவாதிகள் என சந்தேகித்து இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்தது.

பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு
இதில் சம்பவ இடத்திலேயே 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 11 பேரில் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

மக்கள் தாக்குதல்
இதனால் கொந்தளித்த பொதுமக்கள் மோன் மாவட்டத்தில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப் பிரிவினர் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். நாகாலாந்து சம்பவங்களில் இதுவரை மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நாகாலாந்து முதல்வர் நைபியு ரியோ, மோன் மாவட்டத்துக்கு நேரில் சென்று ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கிறார். மேலும் கொல்லப்பட்டோர் குடும்பத்தினருக்கு தலா ரூ5 லட்சம் நிதி உதவி வழங்குகிறார். இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 5 பேர் கொண்ட குழுவும் மோன் மாவட்டத்துக்கு செல்ல உள்ளது.

கொலை வழக்கு பதிவு
இப்படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரிக்க நாகாலாந்து மாநில அரசு ஏற்கனவே விசாரணை குழுவையும் அமைத்துள்ளது. இச்சம்பவத்தை ஒரு போர்க்குற்றம் என்றும் இனப்படுகொலை என்றும் நாகாலாந்து மாநில பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதனிடையே 14 பொதுமக்களைப் படுகொலை செய்த ராணுவத்தினர் மீது தற்போது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகாலாந்து போலீசார் தாமாக முன்வந்து இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

மோன் மாவட்டத்தில் தடை உத்தரவு
பொதுமக்கள் படுகொலையால் கொந்தளிப்புடன் இருக்கும் மோன் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைநகர் கோஹிமாவில் நடைபெற்று வந்த ஹார்ன்பில் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாகாலாந்து மாநிலத்தின் பல பகுதிகளில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படுகொலை சம்பவத்துக்கு ராணுவம் வருத்தம் தெரிவித்துள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications