செஷல்ஸ் கடற்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கடற்படை விமானம் பி-8ஐ!
டெல்லி: இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான பி-8ஐ என்ற கண்காணிப்பு விமானம், செஷல்ஸ் தீவில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.
மார்ச் 20ம் தேதி முதல் இந்த விமானம் தனது பணியைத் தொடங்கியுள்ளது. இந்தியா மற்றும் செஷல்ஸ் நாடுகளிடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்த விமானமானது செஷல்ஸுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையின் கண்காணிப்பு விமானம் செஷல்ஸில் பணியில் ஈடுபடுத்தப்படுவது இதுவே முதல் முறை என்று கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் இந்தியக் கடற்படையின் ரோந்துக் கப்பல்கள் இரண்டு முறை செஷல்ஸ் தீவின் சிறப்புப் பொருளாதார மண்டலப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஆண்டுக்கு இரண்டு முறை இவை பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
கடைசியாக 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியக் கடற்படைக் கப்பல்கள் செஷல்ஸில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தன. தற்போது கண்காணிப்புப் பணிக்காக அனுப்பப்பட்டுள்ள விமானம் மார்ச் 23ம் தேதி வரை அங்கு பணியில் ஈடுபட்டிருக்கும்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகள், கொள்ளை போன்றவற்றைத் தடுக்கவும், அத்தகைய நடவடிக்கைகளை ஒடுக்கும் வகையிலும் இந்த பாதுகாப்புப் பணியில் இந்தியக் கடற்படை ஈடுபட்டுள்ளது.

கடந்த ஆண்டுதான் அரக்கோணம் கடற்படைத் தளத்தில் வைத்து பி-8ஐ விமானப்பிரிவை பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications