செஷல்ஸ் கடற்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கடற்படை விமானம் பி-8ஐ!
டெல்லி: இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான பி-8ஐ என்ற கண்காணிப்பு விமானம், செஷல்ஸ் தீவில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.
மார்ச் 20ம் தேதி முதல் இந்த விமானம் தனது பணியைத் தொடங்கியுள்ளது. இந்தியா மற்றும் செஷல்ஸ் நாடுகளிடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்த விமானமானது செஷல்ஸுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையின் கண்காணிப்பு விமானம் செஷல்ஸில் பணியில் ஈடுபடுத்தப்படுவது இதுவே முதல் முறை என்று கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் இந்தியக் கடற்படையின் ரோந்துக் கப்பல்கள் இரண்டு முறை செஷல்ஸ் தீவின் சிறப்புப் பொருளாதார மண்டலப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஆண்டுக்கு இரண்டு முறை இவை பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
கடைசியாக 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியக் கடற்படைக் கப்பல்கள் செஷல்ஸில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தன. தற்போது கண்காணிப்புப் பணிக்காக அனுப்பப்பட்டுள்ள விமானம் மார்ச் 23ம் தேதி வரை அங்கு பணியில் ஈடுபட்டிருக்கும்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகள், கொள்ளை போன்றவற்றைத் தடுக்கவும், அத்தகைய நடவடிக்கைகளை ஒடுக்கும் வகையிலும் இந்த பாதுகாப்புப் பணியில் இந்தியக் கடற்படை ஈடுபட்டுள்ளது.

கடந்த ஆண்டுதான் அரக்கோணம் கடற்படைத் தளத்தில் வைத்து பி-8ஐ விமானப்பிரிவை பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications