லோக்சபா தேர்தல்: பாஜக அணிக்கு 275; காங். அணிக்கு 111 இடங்கள்- என்.டி.டி.வி. கருத்து கணிப்பு
டெல்லி: லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 275 இடங்களும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 111 இடங்களும் கிடைக்கும் என்கிறது என்.டி.டி.வி. கருத்து கணிப்பு.
லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்னும் பல மாநிலங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் என்.டி.டி.வி. கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இதில் மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக அணிக்கு 275
மொத்தம் உள்ள 543 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தம் 275 தொகுதிகள் கிடைக்குமாம்.

பாஜகவுக்கு 226
இதில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் தனித்து 226 இடங்களைக் கைப்பற்றுமாம்.

காங். அணிக்கு 111
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மொத்தம் 111 தொகுதிகள் கிடைக்குமாம்.

காங்கிரஸ்- 91
இதில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தனித்து 92 இடங்கள் கிடைக்கும் என்கிறது கருத்து கணிப்பு.

பாஜகவுக்கு ஏறுமுகம்
கடந்த பிப்ரவர்ரி மாத கருத்துக் கணிப்பில் பாஜக அணிக்கு 30.1% வாக்குகள் கிடைத்தன. தற்போது ஏப்ரல் முதல் வாரத்தில் 34.5% ஆக அதிகரித்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக அணிக்கு 26.5% வாக்குகளே கிடைத்தன. அதாவது பாஜக அணிக்கு 230 கிடைக்கும் என்று பிப்ரவரி மாதம் கூறப்பட்ட நிலையில் ஏப்ரல் மாதத்தில் 275 இடங்களைக் கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.

காங்கிரஸுக்கு பின்னடைவு
இதேபோல் காங்கிரஸ் அணிக்கு பிப்வரி மாதத்தில் 26.8% வாக்குகள் கிடைத்தன. ஏப்ரல் மாதத்தில் 25.6% வாக்குகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் கடந்த லோக்சபா தேர்தலில் 33.2% வாக்குகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி மாதத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 128 இடங்கள் என்று கணிக்கப்பட்ட நிலையில் தற்போது 111 தான் கிடைக்கும் எனத் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications