சபரிமலையில் இன்று புதிய கொடிமரம் பிரதிஷ்டை
சபரிமலை ஐயப்பன் கோயிலில் புதிய கொடி மரம் அமைக்க வேண்டும் என்று பிரசன்னம் கூறியதை தொடர்ந்து இன்று பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
பம்பை: பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் புதிய கொடி மரம் இன்று பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
சபரிமலை கோயிலில் புதிய கொடிமரம் அமைக்க வேண்டும் என்று தேவ பிரசன்னத்தில் சொல்லப்பட்டதை அடுத்து, கடந்த ஓராண்டாக புதிய கொடிமர வடிவமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
புதிய கொடி மரம் நிறுவுவதற்காக பத்தனம்திட்டை மாவட்டம், கோனி வனப் பகுதியில் இருந்து தேக்கு மரம் கொண்டு வரப்பட்டது. அது காயந்த பின்னர் பம்பை கணபதி கோயிலில் அமைக்கப்பட்ட 40 அடி நீளமுள்ள தொட்டியில் நல்லெண்ணையுடன் பல்வேறு மூலிகைகளை ஊற்றி 6 மாதங்கள் ஊற வைக்கப்பட்டது.

தங்க தகடுகள்
இதைத் தொடர்ந்து அந்த கொடி மரமானது கடந்த மாதம் சபரிமலைக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. பின்னர் கொடிமரத்தில் தங்க தகடுகள் பதிப்பதற்கான பணிகள் நடைபெற்றன.

குதிரை வாகனம்
புதிய கொடி மரம் பிரதிஷ்டை இன்று நடைபெறுவதை முன்னிட்டு, கடந்த 19-ஆம் தேதி முதல் சபரிமலையில் ஆகமவிதிகளின்படி யாகங்கள் நடைபெற்றன. பின்னர் பம்பையில் இருந்து ஊர்வலமாக பக்தி பரவசத்துடன் கொண்டு வரப்பட்ட ஐயப்பனின் குதிரை வாகன சிலைக்கு சன்னிதானத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

பிரதிஷ்டை
பல்வேறு கலை வேலைபாடுகள், சிற்பங்களுடன் கொடிமரத்தில் தங்க தகடுகள் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. இன்று 11.50 மணி முதல் 1.40 மணிக்குள் புதிய கொடி மரத்தை தந்திரி கண்டரரு ராஜீவரு பிரதிஷ்டை செய்து வைக்கிறார்.

10 நாள்கள் விழா
சபரிமலை ஐயப்பன் கோயில் திருவிழா 28-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 7-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications