கொரோனா குமார், கொரோனா குமாரி.. புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு பெயரிட்ட ஆந்திர மருத்துவர்கள்
அமராவதி: கொரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா குமார், கொரோனா குமாரி என ஆந்திர தாய்மார்கள் பெயரிட்டுள்ளனர்.
கொரோனாவை ஒழிக்க உலக நாடுகளே போராடி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் வேம்பள்ளி என்ற கிராமத்தில் இரு நிறைமாத கர்ப்பிணிகள் ரமாதேவி, சசிகலா. இருவரும் கடந்த 4 ஆம் தேதி அங்கிருந்த மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டனர்.
அப்போது அவர்களுக்கு சிசேரியன் மூலம் ஆண், பெண் குழந்தைகள் பிறந்தன. கொரோனா லாக்டவுனில் குழந்தைகள் பிறந்ததால் அவர்களுக்கு கொரோனா குமாரி, கொரோனா குமார் என மருத்துவர்களால் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த பெயர் குறித்து சிசேரியன் செய்த மருத்துவர்கள் கூறுகையில் தற்போது கொரோனா குறித்து அனைவரும் பேசி வருகிறார்கள். வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது நல்ல ஐடியா என எங்களுக்கு தோன்றியது.
இந்த பெயர் குறித்து பெற்றோரிடம் ஆலோசனை செய்தோம். அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். இதையடுத்து அந்த பெயரையே குழந்தைகளுக்கு சூட்டினோம் என்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications