ஆண்டுக்கு ரூ.10,000 கோடி நிதி... என்.ஜி.ஓ. பணம் குவிவதில் டெல்லி முதலிடம்!: 2வது இடத்தில் தமிழ்நாடு!
டெல்லி: நாட்டிலேயே டெல்லியில் உள்ள என்.ஜி.ஓக்களுக்குத்தான் வெளிநாட்டு நிதி அதிக அளவில் கிடைப்பதாகவும் அதற்கு அடுத்து தமிழக நிறுவனங்களுக்குத்தான் பணம் கிடைப்பதாகவும் சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் உளவு அமைப்பான ஐ.பி, பிரதமர் அலுவலகத்துக்கு என்.ஜி.ஓ.க்களின் செயல்பாடுகள் குறித்து ஒரு அறிக்கை அனுப்பியிருந்தது. அதில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவைச் சேர்ந்த உதயகுமார் பெயரைக் குறிப்பிட்டு அமெரிக்காவிடம் இருந்து அவர் பணம் பெற்றதாக குற்றம்சாட்டியிருந்தது.
இதைத் தொடர்ந்து என்.ஜி.ஓக்களின் செயல்பாடுகள் குறித்து நாடு தழுவிய விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ரூ10 ஆயிரம் கோடி
2009-09ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள 23,172 என்.ஜி.ஓக்கள் ரூ10, 997.35 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றுள்ளனர். இதேபோல் 2009-10ஆம் ஆண்டில் 22,275 என்.ஜி.ஓக்கள் ரூ10,431.12 கோடி, 2010-11ஆம் ஆண்டில் 22,735 என்.ஜி.ஓக்கள் ரூ10,334.12 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றிருக்கின்றன.

என்.ஜி.ஓக்கள் நிதியில் டெல்லி முதலிடம்
இப்படி வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதில் டெல்லி முதலிடத்தில் இருக்கிறது. ஆண்டுக்கு மொத்தம் 1815.91 கோடியை வாங்குக் குவிக்கின்றன டெல்லி என்.ஜி.ஓக்கள்.

2வது இடத்தில் தமிழகம்
தமிழகத்து என்.ஜி.ஓக்கள் ரூ1663.31 கோடியை வாங்கிக் குவித்து 2வது இடத்தில் இருக்கின்றன.

3வது இடத்தில் ஆந்திரா
இதற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருப்பது ஆந்திரா. இம்மாநில என்.ஜி.ஓக்கள் மொத்தம் ரூ1324.87 கோடி நிதியை வாங்குகிறது.

அமெரிக்காதான் டாப்
இப்படி என்.ஜி.ஓக்களுக்கு பணம் கொடுப்பதில் அமெரிக்காதான் முதலிடம் வகிக்கிறது. ஆண்டுக்கு ரூ3105.73 கோடி நிதி கொடுக்கிறது அமெரிக்கா. 2வது இடத்தில் இருப்பது ஜெர்மனி. 3வது இடத்தில் இருக்கிறது இங்கிலாந்து.

அமெரிக்க நிறுவனம்..
அமெரிக்காவின் கோஸ்பெல் ஃபார் ஆசியா என்ற நிறுவனம் அதிக நிதி அளிக்கிறது. ஆண்டுக்கு மொத்தம் ரூ232.71 கோடி நிதி கொடுக்கிறது. 2வது இடத்தில் ஸ்பெயினின் விசென்ட் பெர்ரெர் நிறுவனமும் 3வது இடத்தில் வோல்ர்டு விஷன் குளோபல் சென்டரும் அதிக நிதி கொடுக்கக் கூடியவைகளாக இருக்கின்றன.

சிறுபான்மையினர் அமைப்புகள்
இப்போது நாடு முழுவதும் முக்கிய அமைப்புகளுக்கான வெளிநாட்டு நிதி குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் என்.ஜி.ஓக்களும் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications