For Daily Alerts
Just In
அமைச்சர்கள் இன்றி எடியூரப்பா மட்டுமே முதல்வராக பதவியேற்பு.. காரணம் என்ன?
Recommended Video
கர்நாடகாவின் 23வது முதல்வராக பதவி ஏற்றார் எடியூரப்பா!
பெங்களூர்: அமைச்சர் யாரும் இன்றி கர்நாடகாவில் பி.எஸ். எடியூரப்பா மட்டுமே முதல்வராக பதவியேற்றார்.
ராஜ்பவனில் நடைபெற்ற கோலாகல விழாவில், இன்று காலை 9 மணிக்கு எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். இதில் முன்னாள் துணை முதல்வர்கள் ஈஸ்வரப்பா, அசோக், முன்னாள் அமைச்சர்கள் ஸ்ரீராமுலு, கோவிந்த் கார்ஜோல் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என கூறப்பட்டது.
ஆனால் கடைசி நேரத்தில் பாஜக மேலிடத்தில் இருந்து க்ரீன் சிக்னல் வராததால் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டில், பாஜக அரசு அமைவதற்கு எதிராக காங்கிரஸ்-மஜத தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் வரை அமைச்சரவையை உருவாக்க வேண்டாம் என்று, பாஜக மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Comments
English summary
BS Yeddyurappa swears in as Karnataka's CM but no minister take oath.