ஆந்திர அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட பணம் இல்லை: சந்திரபாபு நாயுடு கவலை
ஆந்திர அரசின் நிதி நிலை மோசமாக இருப்பதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
அமராவதி: அரசின் கையிருப்பு பணம் குறைவாக இருப்பதால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவே பணம் இல்லை என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கவலை தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதால் ஆந்திர மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மந்தமடைந்திருக்கிறது. ஆந்திர அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசின் செலவினமோ அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதை தடுப்பதற்கு மாநில அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இந்நிலையில் அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது கூறுகையில், ஆந்திர அரசின் நிதி நிலை மோசமாக இருப்பதாகவும், ஆந்திர அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதற்கு கூட பணம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதிக கடனில் தான் அரசாங்கமே நடந்து கொண்டிருக்கிறது என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார்.வரம்பிற்கு அதிகமாகவே அரசு கடன் வாங்கியுள்ளதால் மேலும் கடன் வாங்க இயலாத சூழல் உள்ளது எனவும் அரசின் சில செலவினங்களில் சிலவற்றை குறைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே மாநில அரசின் தகவல் படி, ஆந்திர அரசு ரூ 13.673 கோடி கடனில் சிக்கித் தவிக்கிறது. தற்காலிக தலைமைச் செயலகம் அமைப்பதற்கு ரூ.500 கோடிக்கு மேல் செலவழிக்கப்பட்டுள்ளது. முதல்வர் அலுவலகம் மற்றும் வீடுகளுக்கு மட்டுமே ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் பணிகள் முழுமையாக முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கட்டுமானப் பணிகளுக்கு தற்போது ரூ.5.82 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் மாநில அரசின் வருவாய் ரூ.22,800 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் அதேநேரம் ரூ.6641 கோடி பற்றாக்குறை உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications