ஆந்திர அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட பணம் இல்லை: சந்திரபாபு நாயுடு கவலை
ஆந்திர அரசின் நிதி நிலை மோசமாக இருப்பதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
அமராவதி: அரசின் கையிருப்பு பணம் குறைவாக இருப்பதால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவே பணம் இல்லை என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கவலை தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதால் ஆந்திர மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மந்தமடைந்திருக்கிறது. ஆந்திர அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசின் செலவினமோ அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதை தடுப்பதற்கு மாநில அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இந்நிலையில் அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது கூறுகையில், ஆந்திர அரசின் நிதி நிலை மோசமாக இருப்பதாகவும், ஆந்திர அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதற்கு கூட பணம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதிக கடனில் தான் அரசாங்கமே நடந்து கொண்டிருக்கிறது என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார்.வரம்பிற்கு அதிகமாகவே அரசு கடன் வாங்கியுள்ளதால் மேலும் கடன் வாங்க இயலாத சூழல் உள்ளது எனவும் அரசின் சில செலவினங்களில் சிலவற்றை குறைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே மாநில அரசின் தகவல் படி, ஆந்திர அரசு ரூ 13.673 கோடி கடனில் சிக்கித் தவிக்கிறது. தற்காலிக தலைமைச் செயலகம் அமைப்பதற்கு ரூ.500 கோடிக்கு மேல் செலவழிக்கப்பட்டுள்ளது. முதல்வர் அலுவலகம் மற்றும் வீடுகளுக்கு மட்டுமே ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் பணிகள் முழுமையாக முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கட்டுமானப் பணிகளுக்கு தற்போது ரூ.5.82 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் மாநில அரசின் வருவாய் ரூ.22,800 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் அதேநேரம் ரூ.6641 கோடி பற்றாக்குறை உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications