கேரளா புதிய ஆளுநராக சதாசிவம் நியமிக்கப்படுவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு
திருவனந்தபுரம்: கேரளா மாநில புதிய ஆளுநராக சதாசிவம் நியமிக்கப்படுவதற்கு கேரளா காங்கிரஸ் தலைவர் வி.எம். சுதீரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான சதாசிவத்தை, கேரள மாநில ஆளுநராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கேரள ஆளுநராக சதாசிவத்தை நியமிப்பது தொடர்பாக எனது கருத்தை மத்திய அரசு கேட்கவில்லை என்று அம்மாநில உம்மண் சாண்டி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் புதிய ஆளுநராக சதாசிவம் நியமிக்கப்படுவதற்கு கேரளா மாநில காங்கிரஸ் தலைவர் வி.எம். சுதீரனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்தியாவின் ஒரு மாநிலத்தின் ஆளுநராக முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த ஒருவரை நியமிப்பது முறையானதா என்பதை அரசியலைப்பு வல்லூனர்கள் ஆராய வேண்டும். இது தொடர்பாக மேலும் விவாதம் நடத்தப்பட வேண்டும்.
முன்னாள் தலைமை நீதிபதி ஜனாதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தவர். அத்தகைய பொறுப்பில் இருந்தவரை ஜனாதிபதிக்கு கீழ் உள்ள பொறுப்பில் எப்படி நியமிக்க முடியும் என்றார்.
மேலும் சதாசிவம் நியமனத்தில் மாநில பாரதிய ஜனதா கட்சியினரும் மகிழ்ச்சியின்றி உள்ளனர். மாநிலத்தின் ஆளுநரை நியமிப்பதற்கு முன்னதாக கட்சியின் மத்திய தலைவர்கள், மாநில தலைவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்றார் சுதீரன்.












Click it and Unblock the Notifications