டெல்லியில் மீண்டும் அமலுக்கு வருகிறது வாகனக் கட்டுப்பாடு: கெஜ்ரிவால் அறிவிப்பு !
டெல்லி: டெல்லியில் மீண்டும் வரும் ஏப்ரல் 15ம் முதல் 30 வரை மீண்டும் வாகனக் கட்டுப்பாட்டு முறை அமல்படுத்தப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் புகை மாசு அதிகரித்துக் கொண்டே போவதால் அதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் டெல்லி அரசு இறங்கியுள்ளது. அதில் ஒரு முக்கிய நடவடிக்கையாக ஒற்றைப் படை பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு ஒரு நாளும், இரட்டைப் படை எண் வாகனங்களுக்கு ஒரு நாளும் என வாகனங்களை ஓட்டுவதற்கான புதிய திட்டத்தை ஜனவரி 1-ம் தேதி முதல் 15 வரை டெல்லி அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த உத்தரவு டெல்லி வாகனங்களுக்கு மட்டும் பொருந்தாது என்றும் பிற மாநில பதிவெண் கொண்ட வாகனங்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, பெண்களால் ஓட்டப்படும் கார்கள், மாற்றுத்திறனாளிகள், ஆம்புலன்சு வண்டிகள், தீயணைப்பு வண்டிகள், ஆட்டோ ரிக்ஷா, பஸ்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் வி.ஐ.பி. வாகனங்களுக்கு இந்த திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டது.
சோதனை முயற்சியாக இந்த திட்டம் மேற்கொள்ளப்படும் என்று டெல்லி அரசு அறிவித்திருந்தது. இந்த சோதனை முயற்சிக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்நிலையில், ஒற்றைப்படை இரட்டைப்படை கார்கள் திட்டத்தின் அடுத்த சோதனை முயற்சி ஏப்ரல் 15-ம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும்.என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications