65 ஆம்புலன்ஸ்கள்.. 3 தேசிய பேரிடர் மீட்பு குழு.. போர்க்களமாக காட்சியளிக்கும் ரயில் விபத்து ஸ்பாட்
புவனேஸ்வர்: ஒடிசாவில் தடம்புரண்ட கோரமண்டல் ரயில் மீது ஹவுரா மற்றும் ஒரு சரக்கு ரயில்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 50 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 350க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படும் ஒவ்வொரு உயிரும் முக்கியம் என்பதால் களத்தில் ஓடிஆர்ஏஎப் மற்றும் என்டிஆர்எப் படையினர் மீட்பு பணியை விரைவுப்படுத்தி உள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டம் அருகே இன்று இரவு சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஒடிசாவின் பாஹா நாகா பஜார் ரயில் நிலையம் அருகே ரயில்கள் மோதிய இந்த விபத்தில் பயணிகள் பலரும் சிக்கியுள்ளனர்.

இதற்கிடையே அந்த பெங்களூரில் இருந்து ஹவுரா சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலும் தடம்புரண்ட கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது மோதியது. அதேபோல் சரக்கு ரயில் ஒன்றும் மோதியது. இதில் தற்போது வரை 50 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 350க்கும் அதிகமானவர்கள் காயம்டைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்பட உயரதிகாரிகள் விரைந்துள்ளனர். ஒடிசா மாநில அரசும் விரைந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் விபத்து நடந்து வரும் இடத்துக்கு ஒடிசா அரசு சார்பில் 4 ஒடிசா மாநில பேரிடர் அதிவிரைவு மீட்பு குழுவினர்(ஓடிஆர்ஏஎப்), 3 தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் (என்டிஆர்எப்) விரைந்து மீட்பு பணியை துரிதப்படுத்தி உள்ளனர்.

மேலும் மீட்பு பணியில் மொத்தம் 65 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ரயில் விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கூடுதல் டாக்டர்கள் மருத்துவமனைகளில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பிற மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள் விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications