என்னங்கடா இது! கள்ளு குடிச்சா கொரோனா போயிரும்னு பச்சை பிள்ளைகளுக்கு ஊத்துறீங்களேடா!
மல்காங்கிரி: கொரோனாவை தடுப்பதற்கு உலக நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்க போராடிக் கொண்டிருக்கும் நிலையில்தான் இந்தியாவில் விதம்விதமான வினோதமான நடவடிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
உலக நாடுகளை இதுவரை இல்லாத வகையில் பேரழிவுக்குள்ளாக்கி வருகிறது ஆட்கொல்லி கொரோனா நோய். கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து விடுதலையாக உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்க பெரும் போராட்டம் நடத்துகின்றன.
கொரோனா தடுப்பு மருந்துகள் நடைமுறைக்கு வர இன்னமும் சில மாதங்களாகும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு வகையான மருந்துகள் கொரோனாவுக்காக பரிந்துரைக்கப்பட்டு அவை சர்ச்சைகளாக வெடித்திருக்கின்றன.

ஒடிஷாவின் மல்காங்கிரி
இதனிடையே ஒடிஷாவின் மல்காங்கிரி மாவட்டத்தில் மண்ணின் ஆதிகுடிகளான பழங்குடிகள் கொரோனாவிடம் இருந்து விடுதலையாக கடைபிடித்த முறைதான் இப்போது பஞ்சாயத்தாகி உள்ளது. ஒடிஷாவின் கோரபுட், மலாங்கிரி, ராயகடா உள்ளிட்ட மலைகளின் பழங்குடிகள் மலேரியாவால், வறுமையால் செத்து மடிந்த பேரவலம் நிகழ்ந்திருக்கிறது.

போண்டா பழங்குடிகள்
இந்தியாவின் அழிந்துவரும் போண்டா பழங்குடி மக்களும் இந்த மலைப் பகுதிகளில்தான் வசிக்கின்றனர். ஆகையால் கொரோனா தொற்று நோயிடம் இருந்து இந்த மக்கள் எப்படி பாதுகாப்பார்களோ என்று பொது சிவில் சமூகம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒடிஷாவின் ஆதிபழங்குடிகள் எதைப் பற்றியும் கவலைப்படாதவர்களாக இருக்கின்றனர்.

கொரோனாவுக்கு ஈச்சங்கள்
முககவசங்கள் அணியாமல் வழக்கம் போல மலைகாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே மல்காங்கிரி மாவட்டம் கிராமம் ஒன்றில் சிறுவர்களுக்கு ஈச்சங் கள்ளை கூட்டமாக அமர வைத்து ஊற்றுகிற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா எதிர்ப்பு சக்தியை ஈச்சங் கள் தரும் என்பது அவர்களது நம்பிக்கை. அதற்காகவே இதை மருந்தாக குழந்தைகளுக்கு கொடுத்திருக்கின்றனர்.

கோமிய சர்ச்சை
தற்போது இந்த வீடியோ குறித்து ஒடிஷா அரசு விசாரணை நடத்தி வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் பசுவின் சிறுநீரான கோமியத்தை குடித்தாலே கொரோனா குணமாகும்; பசுவின் சாணத்தில் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடலாம் என்றெல்லாம் யோசனைகள் ஒருபக்கம் வலம் வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications