விவசாய சீர்திருத்தங்கள்... தவறான தகவல்களை கூறி விவசாயிகளை எதிர்க்கட்சிகள் திசைதிருப்புகின்றன: மோடி
கட்ச்: விவசாய சீர்திருத்தங்கள் தொடர்பாக தவறான தகவல்களை கூறி விவசாயிகளை எதிர்க்கட்சிகள் திசை திருப்புகின்றன என பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார்.
குஜராத் கட்ச் பிராந்தியத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசியதாவது:
கால மாற்றத்துக்கு ஏற்ப உலக அளவில் சிறந்த நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். கட்ச் பிரதேசத்தின் விவசாயிகள் இன்று பழங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். நமது விவசாயிகளின் புதுமையான வழிகள் மீதான ஆர்வத்தை இது காட்டுகிறது

சாதித்த குஜராத்
கடந்த இருபது ஆண்டுகளாக, வேளாண்மை, பால்பண்ணை தொழில், மீன் வளம் ஆகிய துறைகளில் குஜராத் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. விவசாயிகளையும், கூட்டுறவு சங்கங்களையும் அதிகாரப்படுத்தியதை குஜராத் செய்துள்ளது.

திசை திருப்பும் எதிர்க்கட்சிகள்
விவசாய சீர்திருத்தங்கள் குறித்து தவறான தகவல்களைக் கூறி விவசாயிகள் திசை திருப்பப்படுகின்றனர். விவசாய சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் பல ஆண்டுகளாக கோரி வந்தவையே, விவசாய சீர்திருத்தங்களாக தற்போது வடிவம் பெற்றுள்ளன. மத்திய அரசு எப்போதும் விவசாயிகள் நலனில் அக்கறை செலுத்தி வருகிறது.

குஜராத்தின் முந்தைய நிலை
குஜராத் மக்கள் இரவு உணவின் போது மின்சாரம் இருக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வைத்த காலம் ஒன்று இருந்தது. குஜராத்தில் இன்று பெரும் மாற்றம் ஏறுபட்டுள்ளது. இன்றைய குஜராத் இளைஞர்கள், முந்தைய வசதியற்ற நாட்கள் பற்றி அறிந்திருக்கவில்லை.

கட்ச் பெருவளர்ச்சி
பயங்கர நிலநடுக்கத்திற்கு பின்னர் கட்ச் பகுதி அடைந்துள்ள நான்கு மடங்கு வளர்ச்சி குறித்து, ஆராய்ச்சியாளர்களும், பல்கலைக்கழகங்களும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 21-ம் நூற்றாண்டில், எரிசக்தி பாதுகாப்பும், நீர் பாதுகாப்பும் மிகவும் முக்கியமானவை. தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க கட்ச் பகுதிக்கு நர்மதை தண்ணீரைக் கொண்டு வருவது பற்றி முந்தைய காலங்களில் கேலி பேசியவர்கள் உண்டு. இன்று நர்மதை தண்ணீர் கட்சை வந்தடைந்துள்ளது, கட்ச் முன்னேறி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications