கதிராமங்கலம், நெடுவாசலைத் தூக்கி குப்பையில் போடு.. எம்.எல்.ஏக்களுக்கு கைய நிறைய அள்ளிக் கொடு!
விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் நேரத்தில் எம்எல்ஏக்களின் சம்பளம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லியில் தமிழக விவசாயிகள் தங்களை சங்கிலியால் கட்டி 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று மனிதர்களை ஏர்கலப்பையில் பூட்டி சாலைகளில் உழுதனர்.
விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நேரத்தில் தமிழக எம்எல்ஏக்கள் சம்பளம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 50 விவசாயிகள் கடந்த 17ஆம்தேதி முதல் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
செவ்வாய்கிழமை நடைபெற்ற போராட்டத்தில், விவசாயிகள் கைகளில் சங்கிலி பூட்டி அவர்களை அங்கும், இங்கும் இழுத்துச் சென்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, டெல்லி போலீசார் எங்களை இங்கு போராட்டம் நடத்தக்கூடாது என்றும், உடனடியாக தமிழ்நாடு திரும்புங்கள் என்றும் கூறி எங்களை நிர்ப்பந்தப்படுத்துவதாகவும், போலீசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த அடையாள போராட்டத்தை இன்று நடத்தினோம் என்றார்.
இன்று ஏர் கலப்பையில் மனிதர்களை பூட்டி சாலைகளில் உழுதனர். விவசாயிகள் வறுமையில் வாடுகின்றனர். மாடுகளை கூட விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதை உணர்த்தும் விதமாக இந்த போராட்டம் நடத்துவதாக விவசாயிகள் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications