ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுக்கள் சப்ளை செய்துவிட்டோம்: சக்திகாந்த தாஸ்
டெல்லி: இதுவரை ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுக்களை சப்ளை செய்துள்ளதாக டெல்லியில் மத்திய அரசின், பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
சக்திகாந்த தாஸ் கூறியது: நவம்பர் 8ம் தேதி வெளியான பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு, இதுவரை, ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுக்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளன. மொத்த பண புழக்கத்தில் பாதி அதாவது 50 சதவீதம் அளவுக்கு நாங்கள் சப்ளை செய்துவிட்டோம். எனவே இனிமேல் போகப்போக நிலைமை சரியாகவே செய்யும்.

100 ரூபாய்க்கு குறைவான நோட்டுக்கள் மிக அதிக அளவில் வினியோகம் செய்து வருகிறோம். கடந்த 5 வாரங்களில் இதுபோல சப்ளை செய்யப்பட்ட குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களின் அளவு, ஓராண்டில் ரிசர்வ் வங்கி அனுப்பும் வழக்கமான அளவைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.
தேவையான இடங்களுக்கு விமானம் மூலம் பணம் அனுப்பி வைக்கப்படுகிறது. சட்ட விரோதமான பணம் உள்ளே வருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் பணம் எளிதாக கிடைக்க தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முறைகேடுகளை தடுக்க ரிசர்வ் வங்கி மட்டுமின்றி அரசின் பல்வேறு துறைகளும் இணைந்து செயல்படுகின்றன. இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications