ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுக்கள் சப்ளை செய்துவிட்டோம்: சக்திகாந்த தாஸ்
டெல்லி: இதுவரை ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுக்களை சப்ளை செய்துள்ளதாக டெல்லியில் மத்திய அரசின், பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
சக்திகாந்த தாஸ் கூறியது: நவம்பர் 8ம் தேதி வெளியான பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு, இதுவரை, ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுக்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளன. மொத்த பண புழக்கத்தில் பாதி அதாவது 50 சதவீதம் அளவுக்கு நாங்கள் சப்ளை செய்துவிட்டோம். எனவே இனிமேல் போகப்போக நிலைமை சரியாகவே செய்யும்.

100 ரூபாய்க்கு குறைவான நோட்டுக்கள் மிக அதிக அளவில் வினியோகம் செய்து வருகிறோம். கடந்த 5 வாரங்களில் இதுபோல சப்ளை செய்யப்பட்ட குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களின் அளவு, ஓராண்டில் ரிசர்வ் வங்கி அனுப்பும் வழக்கமான அளவைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.
தேவையான இடங்களுக்கு விமானம் மூலம் பணம் அனுப்பி வைக்கப்படுகிறது. சட்ட விரோதமான பணம் உள்ளே வருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் பணம் எளிதாக கிடைக்க தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முறைகேடுகளை தடுக்க ரிசர்வ் வங்கி மட்டுமின்றி அரசின் பல்வேறு துறைகளும் இணைந்து செயல்படுகின்றன. இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications