65 குஜராத் மீனவர்களை நடுக்கடலில் சிறைபிடித்தது பாகிஸ்தான்- 12 படகுகளும் பறிமுதல்!
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: குஜராத் கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 65 பேரை பாகிஸ்தான் கைது செய்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் ஓகா மற்றும் போர்பந்தர் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 12 படகுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இந்த நிலையில் அரபிக் கடலின் நடுவில் 65 இந்திய மீனவர்களையும் பாகிஸ்தான் கைது செய்துள்ளதாக ஒரு மீனவர் உறவினர்களுக்கு ஒயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்தார்.
கடந்த மாதம் சர்வதேச எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த குஜராத் மீனவர் இக்பால் என்பவர் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்த நிலையில் 65 மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications