காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் பீரங்கி தாக்குதல்: இந்திய பாதுகாப்பு வீரர்கள் இருவர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
ஜம்மு: இந்திய-பாகிஸ்தான் எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இந்திய பாதுகாப்பு படையின் 2 வீரர்கள் காயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படை நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தினர்.

ஜோரா, நோவா பின்ட், ஜோக்னா சாக் மற்றும் டென்ட் ஆகிய நிலைகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிநவீன சிறியவகை பீரங்கிகளை கொண்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4.15 மணிக்கு தொடங்கிய இத்தாக்குதல் இன்னும் தொடர்வதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் இந்திய எல்லை பாதுகா்பு படை வீரர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்திய ராணுவம் பதில் தாக்குதலை தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications