மோடி, ஜேட்லி, ராஜ்நாத் மூவரும் வெளிநாட்டில்... யார் புது 'தல.. டெல்லியில் சர்ச்சை!
டெல்லி:பிரதமர் மோடி, நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மூவரும் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதால் மத்திய அரசை வழிநடத்தும் தலைவர் யார் என்பதில் சர்ச்சை வெடித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் பயணமாக வெளி நாடுகளுக்கு சென்றுள்ளார். அவர் நாளை மறுநாள் இரவு டெல்லி திரும்ப உள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு அடுத்த நிலையில் உள்ள நிதி அமைச்சர் அருண்ஜேட்லி இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள புறப்பட்டு சென்றுள்ளார். அது போல மத்திய அமைச்சரவையில் மோடி, அருண்ஜேட்லி ஆகியோருக்கு அடுத்த நிலையில் இருக்கும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் ஜப்பான் நாட்டுக்கு சென்றுள்ளார்.

இதன் காரணமாக மத்திய அமைச்சரவையின் முதல் 3 முக்கியமானவர்களும் ஒரே சமயத்தில் இந்தியாவில் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்றும் நாளையும் இந்தியாவில் இந்த நிலையே நீடிக்க உள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு இத்தகைய சூழ்நிலை ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
பாதுகாப்புக்கான மத்திய அமைச்சக கமிட்டியில் 5 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 3 பேர் ஒரே நேரத்தில் வெளிநாட்டில் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இன்றும் நாளையும் நாட்டை வழி நடத்துவது யார் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. பொதுவாக இப்படி முக்கிய தலைவர்கள் வெளிநாட்டுக்கு சென்று விடும் போது அடுத்த இடத்தில் இருப்பவர் நாட்டை வழி நடத்துவார் என்று அறிவிக்கப்படும்.
ஆனால் இந்த முறை அப்படி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மத்திய அமைச்சரவையில் மோடி, அருண்ஜேட்லி, ராஜ்நாத்சிங் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் சுஷ்மா சுவராஜ் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications