மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரணாப்பை சந்தித்து நலம் விசாரித்த மோடி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து நலம் விசாரித்தார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ரத்த குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக அவர் டெல்லி ராணுவ மருத்துவமனையில் கடந்த 13ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் குணமடைந்து வருகிறார்.
இந்நிலையில், குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை, பிரதமர் மோடி இன்று சந்தித்து உடல் நலம் விசாரித்தார். மேலும், இச்சந்திப்பினைப் பற்றி குடியரசுத்தலைவரின் டுவிட்டர் பக்கத்திலும், "பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத்தலைவரை சந்தித்து நலம் விசாரித்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications