ரொம்ப ஓவரா ஆட்டம் போடுறீங்க.. இதற்கான விளைவுகளை மே 2-ல் பார்ப்பீங்க.. மம்தாவை விளாசிய மோடி!
கொல்கத்தா: மம்தா பானர்ஜி விளையாட்டை மாநில மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். வருகிற மே 2-ம் ம் தேதி மக்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு வெளியேறும் கதவை காண்பிப்பார்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.
இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸை தண்டிக்க மேற்கு வங்கத்தின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் பெருமளவில் முன்வந்துள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
வங்காளத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்காக நாங்கள் பணியாற்றுவோம் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

மேற்கு வங்கத்தில் தீவிர பிரசாரம்
மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. அங்கு பாஜக-ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.இந்த முறை ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்க முயற்சித்து வருகிறது. இதனால் பாஜகவின் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு வேட்டை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் ஒரு பக்கம் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் கான்டாய் பகுதியில் பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:- தேர்தல்கள் மூலை முடுக்காக நடக்கும்போது திரிணாமுல் அரசு ' டுவாரே டுவாரே சர்க்கார் '(வீட்டு வாசலில் அரசாங்கம்) என்று கூறுகிறது. மம்தா பானர்ஜி தீதி(அக்கா) உங்கள் விளையாட்டை மாநில மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். வருகிற மே 2-ம் ம் தேதி மக்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு வெளியேறும் கதவை காண்பிப்பார்கள்.

தாய்மார்கள் பாஜகவுக்கு ஆதரவு
இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸை தண்டிக்க மேற்கு வங்கத்தின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் பெருமளவில் முன்வந்துள்ளனர். ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மம்தா பானர்ஜியால் பதிலளிக்க முடியவில்லை. திரிணாமுல் கட்சியில் உள்ள பணம் பறிக்கும் குண்டர்கள் குறித்தும் மம்தாவால் பதிலளிக்க முடியவில்லை. மத்திய அரசு மேற்கு வங்காளத்திற்கு அனுப்பிய நிவாரணம் மருமகனின் குடோனில் சிக்கியது எப்படி?

நாம் பாரத மாதாவின் மகன்
நாங்கள் மேற்கு வங்கத்தில் சுற்றுலா கும்பல் என்று அழைக்கப்படுகிறோம். எந்த இந்தியரும் இந்த நிலத்தில் வெளிநாட்டவர் அல்ல. ஒவ்வொரு இந்தியரும் நமது பாரத மாதாவின் மகன். வந்தே மாதரம் மூலம் வங்காளம் தேச மக்களை இணைத்தது. மம்தா நீங்கள் சொல்வது போல் நாங்கள் இங்கு விளையாட வரவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளோம். வங்காளத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்காக நாங்கள் பணியாற்றுவோம் என்று பிரதமர் மோடி கூறினார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications