அலோபதி மருத்துவம் குறித்து அவதூறு.. ராம்தேவ் மீது வழக்குப்பதிவு.. விசாரணையை துவங்கிய போலீசார்!
ராய்ப்பூர்: அலோபதி மருத்துவ முறையை அவதூறாக பேசியதாக பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் பாபா ராம்தேவ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று இந்த அளவுக்கு குறைந்துள்ளது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் டாக்டர்கள்தான். அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளும் கொரோனாவுக்கு எதிராக வினை புரிந்தன.
ஆனால் பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் பாபா ராம்தேவ் நவீன மருத்துவ முறைகளை கடுமையாக குற்றம் சாட்டி இருந்தார்.

பகீர் கருத்துக்கள்
''நவீன அலோபதி மருத்துவ முறை முட்டாள்தனமானது. இது தோல்வியடைந்த மருத்துவ முறை. அலோபதி மருந்துகளை உட்கொண்டு பலர் உயிரிழந்து விட்டனர். ரெமிடிசிவர் என இந்திய மருந்து கட்டுப்பாடு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் ஒன்று கூட வேலை செய்யவில்லை' என்று பகீர் கருத்துக்களை கூறி இருந்தார் ராம் தேவ்.

இந்திய மருத்துவ சங்கம் கண்டனம்
இதற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. பாபா ராம்தேவ் மீது நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் நரேந்திர மோடியிடமும் வலியுறுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து அலோபதி மருத்துவ முறையை பாராட்டி பல்டி அடித்தார் பாபா ராமதேவ். இந்த நிலையில் அலோபதி குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக பாபா ராமதேவ் மீது சத்தீஷ்கர் மாநிலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசில் புகார்
இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐ.எம்.ஏ) சத்தீஸ்கரின் பிரிவு மருத்துவர்கள் பலர், ''கடந்த ஒரு வருடமாக, ராம்தேவ் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் பிற முன்னணி அமைப்புகளால் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு எதிராக தவறான தகவல்களையும், அறிக்கைகளையும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகிறார்.

வழக்குப்பதிவு செய்தனர்
நவீன மருத்துவ வசதிகள் மற்றும் அலோபதி மருந்துகள் 90% நோயாளிகளை குணப்படுத்துகின்றன. ராம்தேவ் மக்களிடம் அவநம்பிக்கையை விதைக்கிறார். மாநில அரசின் சட்ட விதிகளை மீறி விட்டார்'' என்று ராய்ப்பூர் போலீசில் புகார் கொடுத்தனர். இந்த புகாரை ஏற்று ராம்தேவ் மீது உயிருக்கு ஆபத்தான வகையில் நோய்த்தொற்று எற்படும் வகையில் செயல்படுதல், அரசால் முறையாக அறிவிக்கப்பட்ட சட்டத்தை களங்கப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக ராய்ப்பூர் போலீஸ் சூப்பிரண்டு அஜய் யாதவ் தெரிவித்தார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications