மருத்துவ மாணவர்கள் கவனத்திற்கு.. கட் ஆஃப் மதிப்பெண்ணை குறைத்தது மத்திய அரசு
மருத்துவ மேற்படிப்புக்கான கட்- ஆஃப் மதிப்பெண்ணை மத்திய அரசு குறைத்துள்ளது.
டெல்லி: மருத்துவ மேற்படிப்புக்கான கட்- ஆஃப் மதிப்பெண்ணை மத்திய அரசு குறைத்துள்ளது. பொதுப் பிரிவினருக்கு 42.5 சதவீதமும், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 32.5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன. இதில் 13 கல்லூரிகளில் மட்டும் மருத்துவப் பட்டமேற்படிப்புகள் இருக்கின்றன.இந்நிலையில் அதிக இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதால் மருத்துவ மேற்படிப்புக்கான கட்- ஆஃப் மதிப்பெண்ணை மத்திய அரசு குறைத்துள்ளது.
பொது பிரிவினருக்கு 42.5%ஆகவும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 32.5% ஆகவும், மாற்றுத் திறனாளிகளுக்கு 37.5% ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டு முதல் புதிய கட் ஆஃப் முறை கடைபிடிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 9,000 மாணவர்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.