தோற்றாலும் பாஜக இந்திய அரசியலின் மையமாக இருக்கும்: பிரசாந்த் கிஷோர் எச்சரிக்கை
பா.ஜ.க தோற்றாலும் அடுத்த சில பத்தாண்டுகளுக்கு இந்திய அரசியலில் மையப்புள்ளியாக இருக்கும் என்றும், ராகுல் காந்தியால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பிரசாந்த் கிஷோரின் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர், "பா.ஜ.க இந்திய அரசியலில் மையப்புள்ளியாக இருக்கும். அவர்கள் வெற்றி அடைகிறார்களோ அல்லது தோல்வி அடைகிறார்களோ, அதனால் எந்த மாற்றமும் ஏற்படாது. காங்கிரஸ் எப்படி 40 ஆண்டுகள் இருந்ததோ, அப்படியே பா.ஜ.கவுக்கும் இருக்கும். அவர்கள் எங்கும் செல்லமாட்டார்கள். தேசிய தேர்தலில் 30 சதவீதம் வாக்கு எண்ணிக்கை பெற முடியும் எனில், அவர்கள் அவ்வளவு எளிதில் எங்கும் செல்லமாட்டார்கள்.", என்று கூறியுள்ளார்.
கோவாவில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய பிரசாந்த் கிஷோர், "மக்கள் மோதியின் மீது ஏமாற்றமடைந்துள்ளனர். மக்கள் கோபமாக இருக்கின்றனர். அவர்கள் மோதியை தூக்கி எறிவார்கள் என்று நினைக்க வேண்டாம். ஒருவேளை, அவர்கள் மோதியை தூக்கி ஏறிவது சாத்தியமே. ஆனால், பா.ஜ.க எங்கும் போகாது. இந்த கட்சி இன்னும் சில பத்தாண்டுகள் வரை அரசியலில் இருக்கும். மக்கள் அவரை தூக்கி ஏறிவார்கள் என்று ராகுல் காந்தி நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அப்படி எதுவும் நடக்காது.', என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், "உங்களால் மோதியை புரிந்துகொள்ளாதவரை, அவரின் பலத்தை புரிந்துகொள்ளாத வரை, அவரை தேர்தலில் தோற்கடிக்க உங்களால் திட்டம் வகுக்க முடியாது. நான் பார்க்கும் சிக்கல் என்னவென்றால், அவரின் பலத்தை ஆட்கள் புரிந்துகொள்ளவில்லை. அல்லது, அவர் எதனால் பிரபலமாக இருக்கிறார் என்பதையும் அவர்களால் கூறமுடியவில்லை. இதை நீங்கள் புரிந்துகொள்ளமுடியவில்லை எனில், அவரை நீங்கள் தோற்கடிக்க முடியாது.", என்று தெரிவித்துள்ளார்.
பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் அஜய் சேஹராவத் இந்த வீடியோ பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து," இறுதியாக, பா.ஜ.க வரும் பத்தாண்டுகளுக்கு இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு சக்தியாக இருக்கும் என்று பிரசாந்த் கிஷோர் அங்கீகரித்துள்ளார். இதைத்தான், அமித் ஷா பல காலத்திற்கு முன்னரே கூறினார்" என்று பதிவிட்டுள்ளார்.
"காங்கிரஸ் மீண்டும் உயிர் பெற முடியும்"
https://twitter.com/IamAjaySehrawat/status/1453619829202571264
இதற்கு முன்னர், மூத்த பத்திரிக்கையாளர் பர்கா தத்துடன் பிரசாந்த் கிஷோர் பேசியபோது, "பாரம்பரிய வழிகளில் காங்கிரஸை மறுமலர்ச்சி அடைய செய்ய முடியும் என்று ராகுல் காந்தி நினைக்கிறார். ஆனால், காங்கிரஸ் அதற்கும் மேல் செல்ல வேண்டும். பீகார் மற்றும் பஞ்சாப் தவிர காங்கிரஸ் 2013 ஆம் ஆண்டிலிருந்து எந்த தேர்தலிலும் வெற்றி பெற்றதில்லை. இந்த இரண்டு இடங்களிலும்கூட போராடித்தான் வென்றது. புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, 1985 ஆம் ஆண்டுக்கு பிறகு, ஒரு கட்சியின் காரணமாக காங்கிரஸ் தொடர்ந்து பின்தங்கி வருகிறது. 2014 ஆம் ஆண்டில் இருந்துதான் காங்கிரஸின் நிலை மோசமடைந்து வருகிறது என்று நினைக்கின்றனர். ஆனால், அது அப்படி இல்லை." என்று கூறியிருந்தார்.
- பிராசாந்த் கிஷோர் எதிர்காலம் என்ன? அரசியல் ஆலோசகரா? அரசியல்வாதியா?
- பிரசாந்த் கிஷோரின் திட்டம்: பாஜகவை எதிர்க்க 340 தொகுதிகளில் புது வியூகம்
இது 2018 ஆம் ஆண்டு வீடியோ. இதில் சில பகுதிகள் இந்த ஆண்டு ஜூலை மாதம் யூ-டியூப் வலைத்தளத்தில் மீண்டும் பதிவேற்றப்பட்டு இருந்தது.
"மோதியின் தோல்வி நிச்சயம் செய்யப்பட்டு விட்டால், அதன் பின்னர் காங்கிரஸ் கட்சி மறுமலர்ச்சி அடையலாம் என்று அவர் நினைக்கிறார். ஆனால், அவரை தோற்கடிக்க முடிந்தாலும் முடியாவிட்டாலும், காங்கிரஸ் கட்சி அடிமட்டத்தில் இருந்து மீண்டும் வேலையைத் தொடங்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது".
காங்கிரஸ் கட்சியுடன் விரிசல் அடைந்த உறவு
சில வாரங்களுக்கு முன், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியையும், பிரியங்கா காந்தியையும் பிரசாந்த் கிஷோர் சந்தித்தார் என்ற செய்திகள் வெளிவந்தன. மேலும், காங்கிரஸ் கட்சியில் அவருக்கு ஏதேனும் பொறுப்பு அளிக்கப்படலாம் என்ற செய்தியும் வந்து கொண்டிருந்தது.
ஆனால், லகிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட கருத்தால், அவருக்கும் கட்சிக்கும் இடையிலான விரிசல் தொடங்கியது.
அக்டோபர் மாத தொடக்கத்தில், சமூக வலைதளங்களில் அவர் காங்கிரஸ் கட்சியில் மறுமலர்ச்சி குறித்து கேள்வி எழுப்பினார். அவர், "லகிம்பூர் கேரி சம்பவத்திற்கு பிறகு பழம்பெரும் கட்சி உடனடியாக மறுமலர்ச்சி அடையும் என்று எதிர்பார்ப்பவர்கள் பெரும் ஏமாற்றமடைவார்கள்." என்று அவர் கூறியிருந்தார்.
"பழம்பெரும் கட்சியில் வேரூன்றியிருக்கும் ஆழமான சிக்கல்களுக்கும் அதன் வடிவத்தில் உள்ள பலவீனத்திற்கும் உடனடி தீர்வு இல்லை", என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.
லகிம்பூர் கேரி சம்பவத்தில் அரசியல் லாப நஷ்டம் பார்ப்பது பாவச்செயல் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா இதற்கு பதில் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த சம்பவத்திற்கு பிறகு காங்கிரசுக்கும் அவருக்குமான உறவில் விரிசல் இருப்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது.
https://twitter.com/PrashantKishor/status/1446352603726565383
கோவா மீது ஆர்வம் காட்டும் திரிணமூல் காங்கிரஸ்
திரிணமூல் காங்கிரஸ் கோவாவில் தன் காலடியை பதிக்க முயற்சி செய்து வருகிறது. கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி மூன்று நாள் பயணமாக வியாழக்கிழமையன்று கோவா சென்றுள்ளார்.
பிரசாந்த் கிஷோர், இந்த கட்சிக்காக கோவாவில் அடித்தளம் போட்டு வருகிறார். அதன் காரணமாகவே, அவர் கோவாவில் உள்ளார்.
கோவாவில் முன்னாள் முதல்வர் லுயிஜின்ஹொ ஃபாலேரோவும் (Luizinho Faleiro) காங்கிரஸ் கட்சியில் சேர்த்துள்ளார்.
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் கட்சி தேர்தலில் வெற்றி பெற திட்டம் வகுத்து தந்தவர் பிரசாந்த் கிஷோர்.
https://twitter.com/AITCofficial/status/1451814101517176840
அதன்பிறகு, இந்த ஆண்டு மே மாதம் ஒரு தொலைக்காட்சி நேர்காணலின்போது, தான் தேர்தல் ஆலோசனை பணியை நிறுத்திக்கொண்டதாக கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவரின் இந்த அறிவிப்புக்கு பிறகு, அவர் அரசியலில் குதிக்கலாம் என்றும் கருத்துகள் நிலவி வந்தன.
ஆனால், 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தல் வரை, திரிணமூல் காங்கிரஸ் கட்சியோடு பிரசாந்த் கிஷோரின் ஆலோசனை நிறுவனம் இணைந்து செயல்படும் என்று தெரிகிறது.
2014ஆம் ஆண்டு, பா.ஜ.கவின் வெற்றிக்கு பின், பிரஷாந்த் கிஷோர் தேர்தல் ஆலோசகராக பிரபலமடைந்தார். பிகாரைச் சேர்ந்த அவர், நரேந்திர மோதி, பா.ஜ.க மற்றும் மம்தா பானர்ஜி தவிர்த்து, நிதிஷ் குமார், பஞ்சாப்பில் கேப்டன் அமரிந்தர் சிங், ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் ஆலோசகராக இருந்தார். தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு அவர் தேர்தல் ஆலோசகராக இருந்தார்.
பிற செய்திகள்:
- இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கூட கொரோனாவை பரப்பலாம் - அதிர்ச்சிகர புது ஆய்வு
- இல்லம் தேடி கல்வித் திட்டம் ஆர்எஸ்எஸ் திட்டமா? அரசு தரப்பு சொல்வதென்ன?
- கார்பன் உறிஞ்சவேண்டிய காடுகளை கார்பன் உமிழ்கிறவையாக மாற்றிய மனிதர்கள்: அதிர வைக்கும் ஆய்வு
- பெகாஸஸ்: 'உளவு பார்த்தவர்கள் சர்வதேச அளவில் அம்பலப்படுவார்கள்' - என்.ராம்
- திரிபுராவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையால் பதற்றம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
-
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications