அனைத்து மக்களும் அமைதி காக்க வேண்டும்- குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த்
வன்முறை வெறியாட்டத்தினால் பொது சொத்து சேதம் விளைவிக்கப்பட்டதற்கு ராம்நாத் கோவிந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி: வன்முறைக்கும், பொதுச் சொத்தை சேதப்படுத்தியதற்கும் குடியரசுத்தைலைவர் ராம்நாத் கோவிந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் அனைத்து மக்களும் அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆசிரமத்தில் தங்கியிருந்த இரு பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் தேரா சச்சா செளதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் பல்வேறு பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டு உள்ளனர்.

ரயில் நிலையங்கள், பெட்ரோல் பங்க், வாகனங்கள், வருமான வரித்துறை அலுவலகம் என அரசு கட்டிடங்கள் மீது வன்முறையாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர்.
வன்முறைக்கும், பொதுச் சொத்தை சேதப்படுத்தியதற்கும் குடியரசுத்தைலைவர் ராம்நாத் கோவிந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் அனைத்து மக்களும் அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications