தெலுங்கானா மசோதாவை திருப்பி அனுப்பினார் பிரணாப்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தெலுங்கானா தொடர்பாக மத்திய அரசு அனுப்பி வைத்த மசோதாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தை பிரித்து தெலுங்கானா என்ற தனி மாநிலத்தை உருவாக்குவது குறித்து அமைச்சரவைக் குழு, தெலுங்கான குறி்த்த வரையறையை இறுதி செய்து அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. மத்திய அமைச்சரவை கூடி, அந்த அறிக்கை மீது ஒப்புதல் அளித்து, அதனை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.

ஆனால், இந்த மசோதா, ஆந்திர மாநில சட்டசபையின் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. அதன்படி, ஆந்திர சட்டசபையின் அனுமதி பெற்ற பிறகு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்குமாறு கூறி, ஜனாதிபதி அலுவலகம் அந்த மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளது.
இது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications