பிரதமர் மோடியின் 64வது பிறந்த நாள்: காஷ்மீர் நிவாரண நிதியாக ரூ5 ஆயிரம் கொடுத்த தாய்!
அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது பிறந்தநாளையொட்டி தாய் ஹிரா பென்னை சந்தித்து அவரது காலைத் தொட்டு ஆசி பெற்றார். அப்போது அவரது தாய் ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரண நிதியாக ரூ 5 ஆயிரம் கொடுத்தார்.
நரேந்திர மோடி பிரதமர் ஆன பிறகு முதன்முறையாக செவ்வாய்க்கிழமை குஜராத் சென்றார். விமான நிலயைத்தில் அவருக்கு பூங்கொத்து கொடுத்து குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல், பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்த தகவலை ஆனந்திபென் பட்டேல் ட்வீட் செய்துள்ளார்.

நன்றி
நன்றி குஜராத். 4 மாதங்கள் கழித்து குஜராத் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கார்யகர்தாக்கள் மற்றும் தலைவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள் என்று மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பிறந்தநாள்
மோடி இன்று தனது 64வது பிறந்நதாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவர் இன்று காலை தனது தாய் ஹிரா பென்னை சந்திக்க தனது சகோதரர் பங்கஜ் மோடியின் வீட்டுக்கு சென்றார்.

ஆசி
4 மாதங்கள் கழித்து தாயை பார்த்த மோடி அவரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

இனிப்பு
ஹிரா பென் தனது மகனுக்கு குஜராத்தின் பிரதான இனிப்பு வகைகளை வழங்கி வாழ்த்தியதுடன் ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.5 ஆயிரம் நன்கொடை அளித்தார்.












Click it and Unblock the Notifications