லால் பகதூர் சாஸ்திரிக்கு அவமரியாதை… பிரியங்கா காந்தி மீது ஸ்மிருதி இராணி குற்றச்சாட்டு
வாரணாசி : முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு, பிரியங்கா காந்தி வதோரா அவமரியாதை செய்து விட்டதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி வதோரா, தான் அணிந்திருந்த மாலையை எடுத்து முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு அணிவித்து அவமரியாதை ஏற்படுத்திவிட்டதாக ஸ்மிருதி இராணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஹிந்தியில் வெளியிட்டுள்ள அந்த பதிவில், ஏற்கனவே தனது கழுத்தில் போடப்பட்ட மாலையை எடுத்து, அதுவும் இடது கையால் தொண்டர்களின் பலத்த கைத்தட்டல் சத்தத்துடன் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு மாலை அணிவிக்கிறார். இது, அவரது "அகந்தையை" காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சியின் உண்மையான மதிப்பை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
என்னாது அதிமுகவில் நானா.. மதுரை ஆதீனம் கூறியதில் உண்மை இல்லை- டிடிவி தினகரன்
இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதி பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பிரியங்கா காந்தி, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் "புதிய சுதந்திர போராட்டம்" என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது .