எழுத்தாளர் கல்பர்கி கொலை: சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசு பரிந்துரை
பெங்களூர்: எழுத்தாளர் எம்.எம்.கல்பர்கி கொலை செய்யப்பட்ட விவகாரத்தை விசாரிக்கும் பொறுப்பை சிபிஐயிடம் ஒப்படைக்கும் வகையில் கர்நாடக அரசு பரிந்துரைத்துள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
கர்நாடக மாநிலம், ஹூப்ளியின் இரட்டை நகர் தார்வார். இந்த நகரின் கல்யாண் நகர் பகுதியில் வசித்தவர் எம்.எம்.கல்பர்கி. முற்போக்கு எழுத்தாளராக அறியப்பட்டவர். நேற்று காலை 8.40 மணியளவில் இவர் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

பைக்கில் வந்த இரு நபர்களில் ஒருவர் கல்பர்கி வீட்டுக்குள் சென்று சுட்டுள்ளார். மற்றொரு நபர் வெளியே பைக்கை கிளப்பி தயாராக நின்றுள்ளார். கொலை நடந்ததும், இரு கொலையாளிகளும் தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து கர்நாடக போலீஸ் டிஜிபி, ஓம்பிரகாஷ் கூறுகையில், தார்வார், துணை கமினர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது என்றார்.

இந்நிலையில், வழக்கு விசாரணையை சி.ஐ.டியிடம் கொடுத்துள்ளதாக மாநில முதல்வர் சித்தராமையா இன்று காலை அறிவித்தார். இந்நிலையில், வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு, இதை விசாரிக்கும் பொறுப்பை சிபிஐயிடம் ஒப்படைப்பதாக மாலையில் சித்தராமையா அறிவித்தார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications