நவராத்திரியுடன் தொடர்புபடுத்தி காண்டம் விளம்பரம்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சன்னி லியோன்
பாலிவுட் நடிகை சன்னி லியோன் நவராத்திரியை தொடர்புபடுத்தி காண்டம் விளம்பரத்தில் நடித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை: பாலிவுட் நடிகை சன்னி லியோன் நவராத்திரியை தொடர்புபடுத்தி காண்டம் விளம்பரத்தில் நடித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சன்னி லியோன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடியை விட கூகுளில் அதிகம் தேடப்படும் ஒரு நபர். கவர்ச்சி நடிகையான சன்னிலியோன் அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அண்மையில் சன்னி லியோன் நடத்திருந்த ஜிஸம் 2 படம் வெளியானது. இதையடுத்து அவரது கொடும்பாவி பல இடங்களில் எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவர் மீது பொது நல வழக்கும் தொடரப்பட்டது.

சர்ச்சையைக் கிளப்பும் விளம்பரம்
கவர்ச்சிப் புயல் சன்னி லியோன் சினிமாவை தவிர சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் இவர் காண்டம் விளம்பரத்தில் நடித்திருந்தார்.

நவராத்திரியுடன் தொடர்புபடுத்தி
படு கவர்ச்சியாக உள்ள அந்த விளம்பரம் நவராத்திரியுடன் தொடர்புபடுத்தி ஒளிபரப்பப்படுகிறது. குஜராத் மாநிலத்தின் பல இடங்களில் மேன் ஃபோர்ஸ் எனும் அந்த காண்டத்தை புரமோட் செய்யும் வகையில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

நவராத்திரியில் விளையாடுங்கள்..
அந்த விளம்பர பலகைகளில் நவராத்திரியில் விளையாடுங்கள்.. ஆனால் அன்புடன்.. என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. கூடவே தாண்டியா குச்சிகளும், கவர்ச்சியாக சன்னி லியோன் பார்ப்பதும் போன்றும் அந்த விளம்பர பலகைகள் உள்ளன. இந்த விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

குவியும் கண்டனங்கள்
சமூக வலைதளங்களில் மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்திந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தடை செய்ய கோரிக்கை
இதுதொடர்பாக அனைத்திந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் கலாச்சாரத்தை அவமதிக்கும் இந்த விளம்பரத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

எந்த அளவிற்கும் செல்வார்..
பிராண்ட் தூதரான சன்னி லியோனின் பொறுப்பற்ற செயல் இது என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பணம் சம்பாதிப்பதற்காக சன்னி லியோன் எந்த அளவிற்கும் செல்ல முடியும் என்பதை அவரது இந்த விளம்பரம் காட்டியுள்ளதாகவும் அவர்கள் தங்களின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications