ஏப்ரல் மாதம் காங்கிரஸ் தலைவர் ஆகும் ராகுல் காந்தி
டெல்லி: வரும் ஏப்ரல் மாதம் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
மார்ச் 28ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15ம் தேதிக்குள் அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை கூட்ட அக்கட்சி முடிவு செய்துள்ளது. இனியும் புதிய தலைவர் நியமனத்தை தள்ளிப் போடக் கூடாது என்று கட்சியினர் நினைக்கிறார்கள்.
அந்த கூட்டத்தில் ராகுல் காந்தி கட்சியின் தலைவராக நியமிக்கப்பட உள்ளார் என்று கூறப்படுகிறது.

கோஷ்டி
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த பிறகு அக்கட்சியில் பல கோஷ்டிகள் உருவாகிவிட்டது. அதில் ஒரு கோஷ்டி, சோனியாவே தொடர்ந்து தலைவராக இருக்க வேண்டும் என்றும், ராகுலுக்கு தலைவர் பொறுப்பை அளித்து அவரை சிரமப்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

தாமதம்
ராகுலை ஏப்ரல் மாதம் தலைவர் ஆக்கியே தீர வேண்டும். இதை மேலும் தாமதம் செய்தால் பல பிரச்சனைகள் தான் ஏற்படும் என்கிறது மற்றொரு கோஷ்டி.

சோனியா, ராகுல்
சோனியா, ராகுல் என கட்சியில் இரண்டு அதிகாரம் படைத்தவர்கள் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், முடிவுகள் எடுப்பதிலும் கால தாமதம் ஆகிறது. அதனால் ராகுலை உடனே தலைவர் ஆக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் மற்றும் எம்.பி. கமல் நாத் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

சோனியா
ராகுலை தலைவர் ஆக்கும் முன்பு கட்சியின் வொர்க்கிங் தலைவராக ஆக்க வேண்டும் என்று சிலர் சோனியா காந்தியிடம் பரிந்துரைத்துள்ளனர். ஆனால் சோனியா அந்த பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டார்.
-
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications