புதுச்சேரி, தமிழக மக்களிடம் ட்விட்டரில் மன்னிப்பு கேட்ட ராகுல் காந்தி: எதற்கு தெரியுமா?
டெல்லி: ஞாயிற்றுக்கிழமையில் இருந்து காய்ச்சலாக இருப்பதால் தான் புதுச்சேரி பிரச்சார பயணத்தை ரத்து செய்ததாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மே 10, 11 ஆகிய தேதிகளில் புதுச்சேரி, தமிழகம் மற்றும் கேரளாவில் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. இந்நிலையில் மேடையில் பேசுகையில் ராகுலை குண்டு வைத்து கொலை செய்வோம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் வீட்டிற்கு மர்ம கடிதம் வந்தது.
இதையடுத்து ராகுல் காந்தியின் புதுச்சேரி பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.

ராகுல்
வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தால் தான் ராகுல் காந்தியின் புதுச்சேரி பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால் ராகுல் காந்தி தனது பயணம் ரத்தானதற்கான காரணத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
காய்ச்சல்
கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து எனக்கு காய்ச்சலாக உள்ளது. இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு(அதாவது 10,11ம் தேதி) ஓய்வு எடுக்குமாறு டாக்டர் அறிவுறுத்தியுள்ளார் என ராகுல் ட்வீட் செய்துள்ளார்.
|
மன்னித்துவிடுங்கள்
10 மற்றும் 11ம் தேதி திட்டமிட்டபடி பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்காக புதுச்சேரி, தமிழகம் மற்றும் கேரளா மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று ராகுல் ட்வீட்டியுள்ளார்.
|
பிரச்சாரம்
மறுபடியும் பிரச்சார பயணம் மேற்கொள்வது குறித்து விரைவில் அனைவருக்கும் அறிவிப்பேன் என்று ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications