ராகுல் பேச்சை காங்கிரஸாரே கேட்பதில்லை, நாங்க ஏன் கேட்கனும்... கேட்கிறார் வெங்கையா
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ராகுல் காந்தி சொல்வதை காங்கிரஸ் கட்சியினரே கேட்பதில்லை. பிறகு நாங்கள் ஏன் கேட்க வேண்டும் என்று கேட்டுள்ளார் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு.
ஜப்பானில் போய் மோடி டிரம்ஸ் வாசிப்பதால் இந்திய மக்களுக்கு ஒரு பயனும் இல்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இதற்கு பாஜக தரப்பிலிருந்து உடனடியாக வெங்கையா நாயுடு பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து வெங்கையா கூறுகையில், ராகுல் காந்தி பேசுவதை அவரது சொந்தக் கட்சியினரே கேட்பதில்லை. பிறகு நாங்கள் எதற்கு கேட்க வேண்டும்.
ஆர்.ஜியை (ராகுல் காந்தியை) யாராவது சீரியஸாக எடுத்துக் கொள்கிறார்களா. அவரது கட்சியினரை அவரை மதிப்பதில்லை. முதலில் அவர் அவரது கட்சியில் பிரச்சினைகளை சரி செய்யட்டும். பிறகு மற்றவர்களைப் பற்றி அவர் பேசலாம் என்றார் நாயுடு.












Click it and Unblock the Notifications