நோ பொலிட்டிக்கல் கமெண்ட்ஸ்... பிரதமர் மோடி உரை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ராகுல்!
டெல்லி: சுதந்திர தினம் என்பதால் பிரதமர் மோடியின் உரை குறித்து எந்த கருத்தையும் தாம் தெரிவிக்க முடியாது...இது அரசியலுக்கான நாள் அல்ல என்று கூறி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
நாட்டின் 69- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார். அப்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், ஓராண்டு கால ஆட்சியில் மத்திய அரசு செய்த சாதனைகளையும் பட்டியலிட்டு பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை குறித்து இன்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, ராகுல் காந்தி, பிரதமரின் உரை குறித்து கருத்து கூற மறுத்துவிட்டார்.

மேலும், இன்று அரசியல் பேசுவதற்கான நாள் இல்லை. பிரதமர் உரை குறித்து நாங்கள் நாளை கருத்து கூறுகிறோம் என்றார்.

அதேபோல் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியேற்றிய அக்கட்சி தலைவர் சோனியா காந்தியும், செய்தியாளர்களுக்கு வெறும் சுதந்திர தின வாழ்த்துக்களை மட்டும் தெரிவித்துவிட்டு வேறு எதைப்பற்றியும் பேச மறுப்பு தெரிவித்துவிட்டு சென்றார்.
Smt. Sonia Gandhi unfurls the National Flag at AICC Headquarters. #JaiHind pic.twitter.com/fEArjeplcj
— INC India (@INCIndia) August 15, 2015 முன்னதாக காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் துவிவேதி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். தேசியக் கொடி ஏற்றிய பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
-
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications