சுத்தமில்லாத கழிவறைகள்... ரயில் நிலைய அதிகாரியை சஸ்பெண்ட் செய்து சதானந்த கவுடா அதிரடி
அகமதாபாத்: குஜராத், சபர்மதி ரயில் நிலையத்தில் கழிவறைகளைத் தூய்மையாக பராமரிக்காத குற்றத்திற்காக, ரயில் நிலைய அதிகாரி ஒருவரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா.
தூய்மையான இந்தியா என்ற திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் மோடி. அரசு அலுவலகங்கள், பள்ளிக, மருத்துவமனைகள், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களை தூய்மையாக வைத்திருப்பதை வலியுறுத்தி இந்தத் திட்டம் கொண்டு வரப்படுகிறது.

இதன் மூலம், மகாத்மா காந்தியின் கனவான தூய்மையான இந்தியாவை வரும் 2019ம் ஆண்டிற்குள் நனவாகக வெண்டும் என்ற குறிக்கோளுடன் இத்திட்டம் தொடங்கப் படுகிறது.
இந்நிலையில், நேற்று குஜராத் மாநிலம் சபர்மதி ரயில் நிலையம் சென்றிருந்தார் மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்தாகவுடா. அங்கு அலுவலகம் மற்றும் கழிவறைகளில் அவர் திடீர் சோதனை நடத்தினார். அப்போது கழிவறைகள் மிகவும் மோசமாக இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக கழிவறையை தூய்மையாக வைக்கத் தவறிய சம்பந்தப்பட்ட ரயில் நிலைய அதிகாரியை அவர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் சதானந்த கவுடா கூறியதாவது:-
நான் ரயில் நிலையங்களுக்கு சென்றால் அங்கு தூய்மைக்கு முன்னுரிமை அளித்து அலுவலகம் மற்றும் கழிவறைகளை ஆய்வு செய்கிறேன். பிரதமரின் ‘தூய்மை இந்தியா' திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று 13 லட்சம் ரெயில் ஊழியர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நாளை (வியாழக்கிழமை) இது தொடர்பாக அனைத்து ஊழியர்களும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். 3 வருடங்களில் ரயில் பெட்டிகளில் 13 ஆயிரம் கழிவு தொட்டிகள் அமைக்கப்படும். அதன் பிறகு ரயில் பாதைகள் அசுத்தமாக வாய்ப்பு இருக்காது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications