மருத்துவக் கல்லூரி கட்ட ரூ. 100 கோடி நன்கொடை... தொழிலதிபர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!!

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு 100 கோடி ரூபாய் கொடுக்க முன் வந்த தொழிலதிபர் பிடி அகர்வால் கொரோனாவுக்கு உயிரிழந்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் பிடி அகர்வால். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டில் ஸ்ரீகங்காநகரில் மருத்துவக் கல்லூரி அமைக்க நன்கொடையாக 100 கோடி ரூபாய் வழங்குவதற்கு முன் வந்தார். ஆனால், இந்த நன்கொடையை வாங்குவதற்கு மறுத்து விட்டனர்.

Rajasthan businessman dies of Covid one who offered to build Medical college

இவர் ஜமீன்தாராக கட்சியை துவக்கி நடத்தி வந்தார். இந்த நிலையில் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஜெய்ப்பூரில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும், இவருக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காக இந்த நன்கொடையை வழங்க முன்வந்தார். அதற்கான காசோலையையும் அப்போது மருத்துவமனை கட்டுவதற்கு முயற்சித்து வந்த சங்கர்ஷ் சமிதியிடம் அளித்தார். இவர்கள் அப்போது முதல்வராக இருந்த அசோக் கெலாட்டிடம் வழங்குவதற்கு முன் வந்தனர். ஆனால், இந்த காசோலையை வாங்குவதற்கு அசோக் கெலாட் மறுத்துவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+