ராஜஸ்தான்:காங்.-ல் கலகக் குரல் எழுப்பிய சச்சின் பைலட்- ஆம் ஆத்மியில் இணைகிறாரா? தனிக்கட்சி தொடக்கமா?

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில காங்கிரஸில் மிகவும் உக்கிரமாக கலகக் குரல் எழுப்பியுள்ள சச்சின் பைலட் தற்போது டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை சந்தித்து ராஜஸ்தான் நிலவரம் குறித்து பைலட் ஆலோசனை நடத்தினாலும் அவரது அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பது பெரும் விவாதத்துகுரியதாக உருவெடுத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே உறையில் இரு கத்திகள் என்பது போல சீனியரான முதல்வர் அசோக் கெலாட்; மற்றொரு இளம் தலைவர் சச்சின் பைலட். இத்தனைக்கும் அசோக் கெலாட் அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்தவர் சச்சின் பைலட். ஆனாலும் முதல்வர் பதவி மீதான குறியில் சச்சின் பைலட் அவ்வப்போது அவதாரம் எடுப்பது வழக்கமாகிவிட்டது.

Rajasthan: Sachin Pilot to Quit Congress? Join with AAP or Float new Party?

இந்த முறை முந்தைய பாஜக ஆட்சி மீதான ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 5 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று ஜெய்ப்பூரில் நடத்தினார் சச்சின் பைலட். இது அசோக் கெலாட்டுக்கு எதிரான யுத்தம் அல்லது பாஜகவுக்கு எதிரான போராட்டம் என்பது மட்டுமல்ல. இந்த போராட்டத்தின் மூலம் தமது அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தவும் தொடங்கிவிட்டார் சச்சின் பைலட் என்பதே அரசியல் பார்வையாளர்கள் கருத்து.

பாஜகவுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் அவர் பாஜகவுக்கு படைபரிவாரங்களோடு தாவக் கூடும் என்கிற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இப்போதைக்கு சச்சின் பைலட் முன் உள்ள 2 வாய்ப்புகள் ஒன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைவது; 2-வது தனிக் கட்சி தொடங்குவது.

காங்கிரஸில் இருந்து பிரிந்து போய் தனிக்கட்சி தொடங்கி போனியானவர்களில் சரத்பவாரைத் தவிர வேறு யாரையும் சொல்ல முடியாது. அண்மையில் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங் இப்படி ஒரு முயற்சியில் இறங்கி இருந்த இடம் தெரியாமல் போனார். ஜம்மு காஷ்மீரில் குலாம் நபி ஆசாத் தனி ஆவர்த்தனம் வாசித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த ஆவர்த்தனம் எத்தனை நாளைக்கு என தெரியாது என்கிற நிலைமைதான்.

வட இந்திய மாநிலங்களில் காங்கிரஸ் இடத்தை மெல்ல மெல்ல ஆம் ஆத்மி கைப்பற்றி வருகிறது. இதற்கு நல்ல உதாரணமாக பஞ்சாப் மாநில நிலவரத்தை சொல்லலாம். பஞ்சாப்பில் இப்போது ஆம் ஆத்மி ஆட்சியையே கைப்பற்றி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் தமக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை நம்புகிற சச்சின் பைலட், ஆம் ஆத்மி ஜோதியில் இணைந்து ராஜஸ்தானில் சாதிக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகம் இருக்கிறது என்பதையும் அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+