அரசியல் கொலைகளுக்கு கேரளா மாநில அரசு முடிவு கட்ட வேண்டும்: ராஜ்நாத்சிங் வலியுறுத்தல்
கன்னூர்: கேரளாவில் நடைபெறும் அரசியல் கலவரங்களுக்கு அம் மாநில அரசு கண்டிப்பாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
கன்னூரில் சிபிஐ கட்சி உறுப்பினரால் இந்த மாத தொடக்கத்தில் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் கே மனோஜின் இல்லத்திற்கு சென்று அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ராஜ்நாத் சிங் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில அரசு கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பயம் நிறைந்த சூழலை கட்டுபடுத்துவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்ற அரசியல் கொலைகள் நடைபெறும் இடத்தில் நேர்மையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். எதிர் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறமால் தடுப்பதற்கு அரசு உறுதி அளிக்க வேண்டும்.
பேசுவதற்கு சுதந்திரம், மதசெயல்பாடுகளுக்கான சுதந்திரம், அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான சுதந்திரம் உள்ளிட்டவைகளுக்கு உறுதி அளிக்க வேண்டும். மாநில அரசுக்கு என்னென்ன உதவிகள் தேவையோ அதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications