அது அவங்க பிரச்சனை.. காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா அதிரடி நிலைப்பாடு.. பாக்.கிற்கு மேலும் சிக்கல்
காஷ்மீரில் தற்போது இந்தியா செய்யும் மாற்றங்கள் என்பது அவர்களின் தனிப்பட்ட முடிவு, இது கண்டிப்பாக அவர்களின் உள்நாட்டு பிரச்சனைதான் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. காஷ்மீரில் தற்போது இந்தியா செய்யு
நியூயார்க்: காஷ்மீரில் தற்போது இந்தியா செய்யும் மாற்றங்கள் என்பது அவர்களின் தனிப்பட்ட முடிவு, இது கண்டிப்பாக அவர்களின் உள்நாட்டு பிரச்சனைதான் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
70 வருடங்களுக்கு மேலாக நீடித்து வந்த காஷ்மீர் பிரச்சனையில் நேற்று அதிரடி திருப்பம் நிகழ்ந்தது. ராஜ்ய சபாவில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போது அமெரிக்க அரசும் கருத்து தெரிவித்துள்ளது.
என்ன சொன்னார்
இது தொடர்பாக வெள்ளை மாளிகை சார்பாக அதன் ஸ்டேட் டிப்பார்ட்மெண்ட் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான மார்கன் ஓர்டாகஸ் பேட்டி அளித்துள்ளார். அதில், காஷ்மீரில் தற்போது இந்தியா செய்யும் மாற்றங்கள் என்பது அவர்களின் தனிப்பட்ட முடிவு . இது கண்டிப்பாக அவர்களின் உள்நாட்டு பிரச்சனைதான்.
எங்கள் முடிவை
அவர்களின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவர்களின் உள்நாட்டு விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அங்கு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதும், இரண்டாக அந்த மாநிலம் பிரிக்கப்பட்டதும் தெரியும். இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
வெள்ளை மாளிகை
அங்கு நடக்கும் விஷயங்களை வெள்ளை மாளிகை கவனித்து வருகிறது. காஷ்மீரில் நடக்கும் விஷயங்கள் எங்களுக்கு தெரியும். அங்கு இருப்பவர்கள் கலவரத்தில் ஈடுபடாமல் அமைதியாக இருந்தாலே போதும் என்று மார்கன் ஓர்டாகஸ் பேட்டி அளித்துள்ளார்.
உள்நாட்டு விவகாரம்
இந்த நிலையில் காஷ்மீர் விவகாரத்தை அமெரிக்கா, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று கூறி இருப்பதால் பாகிஸ்தானுக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் இதனால் மீண்டும் இந்தியாவின் கை ஓங்கி உள்ளது. அதேபோல் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுப்பதற்கான அறிகுறியும் தோன்றியுள்ளது.