விபத்தில் சிக்கி நொறுங்கி கிடக்கும் ஏ.என்.32 விமானம்.. கடினமான மலையில் களமிறங்கிய மீட்புக் குழு
இடாநகர்: கடந்த 10 நாட்களுக்கு முன் மாயமான இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக சரக்கு விமான பாகங்கள் சிதறியுள்ள கடினமான மலைபகுதியில், விமானப்படை குழு ஒன்றை களமிறக்கியுள்ளது.
சுமார் 8 முதல் 10 பேர் கொண்ட இக்குழுவானது, விமான பாகங்களின் சிதறல்களுக்கிடையே யாரேனும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்களா என்பதை கண்டறியும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அசாம் மாநிலம் ஜோர்காட் விமான தளத்திலிருந்து கடந்த ஜூன் 3 அன்று 13 பேருடன் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக சரக்கு விமானம் அருணாச்சல பிரதேசத்துக்கு புறப்பட்டு சென்றது. ஆனால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
இதனையடுத்து மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. மோசமான வானிலையால் மாயமான விமானத்தை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து விமானப்படைக்கு சொந்தமான அதிநவீன விமானங்கள் உதவியுடன், மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டது.
ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்ற தீவிர தேடுதல் வேட்டையின் பலனாக, அருணாச்சல பிரதேசத்திலுள்ள லிபோ என்ற பகுதிக்கு வடக்கே, உடைந்த விமானத்தின் பாகங்கள் கண்டறியப்பட்டன. மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட எம்.17 ரக ஹெலிகாப்டரில் சென்ற விமானப் படை வீரர்கள், உடைந்து நொறுங்கிய விமான பாகங்களை கண்டுபிடித்தனர். இது தொடர்பான புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டது
இப்புகைப்படம் ஹெலிகாப்டரில் இருந்து சுமார் 12,000 அடி உயரத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விபத்து நடந்த பகுதிக்கு அருகே மீட்பு ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன. விமான பாகங்கள் சிதறி கிடக்கும் பகுதியானது அடர்ந்த வனம் மற்றும் கடினமான மலை பகுதியை உள்ளடக்கியது என்பதால், மீட்பு ஹெலிகாப்டர்களை தரையிறக்குவதில் சிரமம் ஏற்பட்டது
இந்நிலையில் மீட்பு ஹெலிகாப்டர்களின் உதவியுடன் விமான பாகங்கள் சிதறி கிடக்கும் மிகவும் ஆபத்தான பகுதியில், சுமார் 10 பேர் கொண்ட குழு இறக்கி விடப்பட்டுள்ளது. அவர்கள் கூறும் தகவல்களை வைத்தே உடைந்த விமான பாகங்கள் ஏ.என்.32 ரக சரக்கு விமான பாகங்கள் தானா, அப்படி இருக்கும் பட்சத்தில் அதில் பயணித்த 13 பேரில் யாராவது உயிருடன் இருக்கிறார்களா என்பது தெரியவரும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications