மூன்றில் ஒரு மடங்கு பணம்தான் சப்ளையாகியுள்ளது.. புத்தாண்டிலும் பணத் தட்டுப்பாடு தொடரும்!
டெல்லி: வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பணம் எடுக்க நிலவும் கட்டுப்பாடு டிசம்பர் 30ம் தேதிக்கு பிறகும் தொடரும் என்று கூறப்படுகிறது.
கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி திடீரென புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பதாக அறிவித்தார். டிசம்பர் 30ம் தேதிக்குள் பழைய ரூபாய் தாள்களை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து வங்கி மற்றும் ஏடிஎம்களில் இருந்து மக்கள் பணம் எடுக்கவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. வாரத்திற்கு ரூ.24 ஆயிரம்தான் வங்கிகளிலிருந்து எடுக்க முடியும் என்றும் பிற தேவைகளுக்கு ஆன்லைன், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தவும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
ஆனால் புத்தாண்டிலும் இதே நிபந்தனை தொடருமாம். ஏனெனில் நிபந்தனைகள் ஒரேயடியாக தளர்த்தப்பட்டால் குவியும் பணத் தேவையை பூர்த்தி செய்ய வங்கிகளிடம் போதிய ரூபாய் தாள்கள் இல்லை. இதை எஸ்.பி.ஐ வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சாரியாவும் உறுதி செய்தார். எனவே நிபந்தனை படிப்படியாக தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 9ம் தேதி முதல் டிசம்பர் 19ம் தேதிக்குள், ஆர்.பி.ஐ 5.92 லட்சம் கோடிகளை வங்கிகளுக்கு வினியோகித்துள்ளது. ஆனால் புழக்கத்திலிருந்து அகற்றப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் மதிப்பு ரூ.15.4 லட்சம் கோடி என்பது நினைவிருக்கலாம். எனவே 3ல் ஒரு பங்கு பண சப்ளையை வைத்து முழு தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது. கேஷ்லெஸ் மூலமாகவே பரிமாற்றங்கள் நடைபெற வேண்டியது வலுக்கட்டாயமாகத்தான் போகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications