மூன்றில் ஒரு மடங்கு பணம்தான் சப்ளையாகியுள்ளது.. புத்தாண்டிலும் பணத் தட்டுப்பாடு தொடரும்!
டெல்லி: வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பணம் எடுக்க நிலவும் கட்டுப்பாடு டிசம்பர் 30ம் தேதிக்கு பிறகும் தொடரும் என்று கூறப்படுகிறது.
கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி திடீரென புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பதாக அறிவித்தார். டிசம்பர் 30ம் தேதிக்குள் பழைய ரூபாய் தாள்களை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து வங்கி மற்றும் ஏடிஎம்களில் இருந்து மக்கள் பணம் எடுக்கவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. வாரத்திற்கு ரூ.24 ஆயிரம்தான் வங்கிகளிலிருந்து எடுக்க முடியும் என்றும் பிற தேவைகளுக்கு ஆன்லைன், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தவும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
ஆனால் புத்தாண்டிலும் இதே நிபந்தனை தொடருமாம். ஏனெனில் நிபந்தனைகள் ஒரேயடியாக தளர்த்தப்பட்டால் குவியும் பணத் தேவையை பூர்த்தி செய்ய வங்கிகளிடம் போதிய ரூபாய் தாள்கள் இல்லை. இதை எஸ்.பி.ஐ வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சாரியாவும் உறுதி செய்தார். எனவே நிபந்தனை படிப்படியாக தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 9ம் தேதி முதல் டிசம்பர் 19ம் தேதிக்குள், ஆர்.பி.ஐ 5.92 லட்சம் கோடிகளை வங்கிகளுக்கு வினியோகித்துள்ளது. ஆனால் புழக்கத்திலிருந்து அகற்றப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் மதிப்பு ரூ.15.4 லட்சம் கோடி என்பது நினைவிருக்கலாம். எனவே 3ல் ஒரு பங்கு பண சப்ளையை வைத்து முழு தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது. கேஷ்லெஸ் மூலமாகவே பரிமாற்றங்கள் நடைபெற வேண்டியது வலுக்கட்டாயமாகத்தான் போகிறது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications