பதிவான ஓட்டுகளில் குழப்பம்.... தார்வாட் மத்திய தொகுதி முடிவுகள் நிறுத்திவைப்பு!
ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதிக்கான தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து, அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதில், ஹூப்ளி- தார்வாட் மத்திய தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜகதீசஷ் ஷெட்டர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மின்னணு வாக்குப் பதிவில் பதிவான ஓட்டு கணக்கில் சில குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதனால், இந்தத் தொகுதிக்கான முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜகதீஷ் ஷெட்டர், 72,182 வாக்குகள் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்ததாக காங்கிரஸ் கட்சியின் மகேஷ் நல்வாட் 49,835 ஓட்டுகள் பெற்றுள்ளார்.
பதிவான ஓட்டுகளில் உள்ள குழப்பத்தால், தேர்தல் முடிவு மாறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications