For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னது..?? 5 லட்சம் தரமாட்டியா? தொழிலாளிக்கு அறைவிட்ட எம்எல்ஏ

Google Oneindia Tamil News

Recommended Video

    தொழிலாளியை அறைந்த ராஷ்டிரிய ஜனதா தள எம்எல்ஏ-வீடியோ

    லக்கிசராய்:நிலத்தகராறில் தொழிலாளியை அறைந்த ராஷ்டிரிய ஜனதா தள எம்எல்ஏ மீது பீகார் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    பீகார் மாநிலத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அம்மாநிலத்தை சேர்ந்த ராஷ்டிரிய ஜனதா தள எம்எல்ஏவான பிரகலாத் யாதவ் தான் அறை விட்டவர். லக்கிசாராய் மாவட்டத்தில் உள்ள சூர்யகர்க் என்ற பகுதியில் உள்ள தொழிலாளி ஆஷிஸ் குமார் என்பவர் தமது இடத்தில் சுற்றுச்சுவர் கட்ட விரும்பினார்.

    Rjd mla prahlad yadav slaps a man in suryagarha, bihar over a land dispute matter

    அதற்கான பணிகளிலும் அவர் இறங்கியுள்ளனர். அப்போது அங்கு சிலருடன் எம்எல்ஏவான பிரகலாத் யாதவ் போலீசாருடன் வந்திருக்கிறார். சிறிது நேரத்தில் என்ன ஆனதோ தெரியவில்லை.... ஆஷிஸ்குமாரின் சட்டையை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்து தள்ளிவிட்டார்.

    இந்த காட்சிகள் அங்குள்ள கேமிரா ஒன்றில் பதிவாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து, அறைவாங்கிய ஆஷிஸ் குமார் போலீசில் புகார் கொடுத்தார். புகாரில் தமக்கு சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் கட்ட விரும்பியதாகவும் அதற்கான பணிகளில் இறங்கியதாகவும் கூறியிருக்கிறார்.

    அப்போது அங்கு 19 பேருடன் வந்த எம்எல்ஏ பிரகலாத் யாதவ் பணம் 5 லட்சம் தருமாறு கேட்டார் என்றும், மறுத்ததால் கன்னத்தில் அறைந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். அவரது மனுவை பெற்றுக்கொண்ட போலீசார், எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English summary
    In Bihar, RJD MLA Prahlad Yadav slaps man over land dispute and police ragisered a case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X