பொது இடத்தில் புகைப் பிடித்தால் அபராதம் ரூ 200 ஆக உயர்வு... கேரளாவில் அமல்
திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம் விதிக்கப் படும் என புதிய உத்தரவு அமல் படுத்தப் பட்டுள்ளது.
ஏற்கனவே, பொது இடக்களில் புகை பிடிப்பவர்களுக்கு ரூ 100 அபராதமாக விதிக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில், சட்டத்தை மேலும் கடுமையாக்கும் வகையில் கேரள அரசு அபராதத் தொகையை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.
அந்தவகையில், இனி, பொது இடங்களில் புகைப் பிடிப்பவர்களிடம் ரூ 200 அபராதத் தொகையாக வசூலிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

விற்பனைத் தடை...
கேரளாவில், புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பொது இடங்களில் புகைப்படிப்பது தண்டனைக்குரிய குற்றமாக சட்டமியற்றப் பட்டுள்ளது.

உத்தரவு...
விதியை மீறி பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது போலீசார் இதுவரை ரூ.100 அபராதமாக விதித்து வந்தனர். தற்போது, இந்தச் சட்டத்தை மேலும் கடுமையாக்கும் வகையில் கேரள மாநில அரசு மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

பொது இடங்களில்...
அதில், பொது இடங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக புகை பிடிப்பவர்களை எச்சரிக்கை செய்யவும், அவர்கள் மீது அபராதம் விதிக்கவும் சுகாதார துறை அதிகாரிகளுக்கும், மதுவிலக்கு, உணவுத்துறை, வனத்துறை அதிகாரிகளுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அபராதத் தொகை உயர்வு...
மேலும் இதுவரை பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது விதிக்கப் பட்டு வந்த அபராதத் தொகையான ரூ 100, அதிகரிக்கப்பட்டு இனி ரூ 200 அபராதத் தொகை வசூலிக்கப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

2 வருட சிறைத் தண்டனை...
அதேபோல், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் அவர்களுக்கு 2 வருட சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications