பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த ரூ.4000 கோடி ஒதுக்குகிறது மத்திய அரசு
சென்னை: பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ரூ.4000 கோடியை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு நகர திட்டம், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி, அவசர உதவி எண், வடகிழக்கு மாநில பெண்களின் பாதுகாப்பு, உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு இந்த தொகையை ஒதுக்க ஒத்துக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெண்கள் பாதுகாப்புத் திட்டங்களுக்காக மத்திய அரசு உருவாக்கிய நிர்பயா நிதியில் இருந்து ரூ. 4, 000 கோடி பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த உதவும் பல்வேறு திட்டங்களுக்கு செயல்படுத்த உள்ளது. பாதுகாப்பான நகரங்களை உருவாக்குவதற்காக பாதுகாப்பு நகர திட்டத்தினை செயல்படுத்த ரூ. 2,919 கோடிகளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி டெல்லி, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கொத்தா, அகமதாபாத், மற்றும் லக்னோ ஆகிய பெரிய நகரங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. பாதுகாப்பான நகர திட்டத்திற்குத்தான் அதிகப்படியாக ரூ.2,919 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை, அமிலவீச்சு, போன்ற கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இழப்பீடு வழங்கி உதவி செய்யும் வகையில் 200 கோடி
ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் தங்கள் அவசர உதவிகளுக்காக நாடு முழுவதும் 112 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த எண்ணை தொடர்பு கொண்டால் பெண்களுக்கான அவசர உதவி மையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.321 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தவிர சண்டிகரில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் நவீன டி.என்.எ. பரிசோதனை வசதிகள் போன்ற நவீன வசதிகளை ஏற்படுத்த ரூ.99 கோடிகளும், வடகிழக்கு மாநில பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த ரூ.25 கோடிகளும், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு ஆலோசகர்கள் ஆகியோருக்கான வசதிகளை மேம்படுத்த ரூ.5 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications